கிண்டிட்டாய்ங்கய்யா.. பட்ஜெட் ஹல்வா கிண்டிட்டாய்ங்க- வீடியோ இணைப்பு!

கிண்டிட்டாய்ங்கய்யா.. பட்ஜெட் ஹல்வா கிண்டிட்டாய்ங்க- வீடியோ இணைப்பு!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதையடுத்து அவர் பல்வேறு துறை சார்ந்தவர்களுடன் பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். தொழில்துறையினர், வர்த்தகர்கள், தொழிற்சங்கங்கள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் என தனித்தனியாக அழைத்து ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற்றன.

பலத் தரப்பட்ட பட்ஜெட் ஆலோசனைகள் முடிந்து தற்போது அச்சிடும் பணிகள் தொடங்கியுள்ளன. இதனை தொடங்கும் முன்பாக பாரம்பரியமாக செய்யப்படும் அல்வா தயாரித்து தொடங்கி வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தயாரித்து அச்சிடத் தொடங்கும் முன்பு, அல்வா கிண்டும் விழா நடத்தப்படுகிறது. அதிக அளவில் அல்வா தயாரித்து, அவை நாடாளுமன்றத்தின் வடக்கு பிளாக்கில் மிகவும் பத்திரமாக எடுத்து வைக்கப் படும். பிறகு பட்ஜெட் தயாரிக்கும் பணி நடந்து, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டதும், இந்த அல்வாவை, மத்திய நிதி அமைச்சர், பட்ஜெட் தயாரிக்க உதவிய அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவருக்கும் கொடுப்பார்.

இது குறித்து  விசாரித்த போது, ‘எந்த ஒரு நல்ல காரியத்தை செய்யும் முன்பும் இனிப்பு செய்வது இந்தியர்களின் பாரம்பரியம். அதன் அடிப்படையில் தான் பட்ஜெட் தயாரிக்கும் முன்பு அல்வா கிண்டும் விழா நடத்தப்படுகிறது. ஆனால், ஏன் குறிப்பாக அல்வா கிண்டுகிறார்கள் என்று கேட்டால் அதற்கு எங்களிடம் பதில் இல்லை. மன்னிக்கவும்’ என்றார்கள்.

அதன்படி நிதியமைச்சக அலுவலகத்தில் பட்ஜெட் பிரிண்டிங் செய்யும் அலுவலகத்தில் முதல்கட்டமாக அல்வா தயாரிக்கப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் நிதியமைச்சக அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். பின்னர் அல்வா தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

Related Posts

error: Content is protected !!