பத்து வயசுலே பள்ளி ஆசிரியரால் பலாத்காரம்! – ஃபேஸ்புக் வைரல் ரிப்போர்ட்!

பத்து வயசுலே பள்ளி ஆசிரியரால் பலாத்காரம்! – ஃபேஸ்புக் வைரல் ரிப்போர்ட்!

மும்பையின் மையப்பகுதியில் இருக்கும் `மும்பை சென்ட்ரல்’ மற்றும் `க்ராண்ட் ரோடு’ என்ற ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இருக்கும் காமாத்திபுரா-விலிருந்து ஒரு மெல்லிய குரல் எழும்பி சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக்காகி வருகிறது. இத்தனைக்கும் அந்த காமாட்டிபுரா என்பது ஒரு சின்ன தெரு தான். ஆனால் அதை சுற்றி இருக்கும் பல தெருக்களில் குடிசைத் தொழில் போல் விபச்சாரம் நடைபெறுகிறது என்றாலும் காமாத்திபுரா மட்டுமே மும்பை பாலியல் தொழிலுக்கான மொத்த அடையாளமாக பெயர் பெற்றுவிட்டது.

lady sep 28

சிம்பிளாக சொல்வதானால் ஏசியாவின் மிகப் பெரிய ரெட்லைட் ஏரியாவான இங்கேயே பிறந்து வளர்ந்த பெண் ஒருவர்தான், இந்த சமூகத்தில் தான் சந்தித்த, சந்திக்கும் பிரச்னைகளை ‘ஹியூமன்ஸ் ஆப் பாம்பே‘ என்ற ஃபேஸ்புக்’ பக்கத்தில் உரத்தக் வலியுடன் கொட்டியுள்ளார். அவரது பதிவுதான் வைரல் ஆகியிருக்கிறது. இத்தனைக்கும் இந்த பெண் ஒன்றும் சாதாரண ஆள் இல்லை. காமத்திபுராவில் பிறந்ந்தாலும் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ‘கேர்ள் ஆன் தி ரன்’ என்ற மாநாடு வரை போய் பெண்கள் உரிமை குறித்து பேசியவராக்கும்.

இதோ அவரின் பதிவு – தமிழில்

” கேரளாவில் இருந்த என்னோட அம்மா பாலியல் தொழிலுக்காகவே சில பேர் மும்பைக்கு அழைச்சி வந்தாங்க. என்னோட அப்பா எனது அம்மாவை பார்த்ததும், தீவிர காதலில் விழுந்துட்டாராம். அவரோட காதல் கிறுக்குத்தனமாகவே அப்போவே எனது அம்மாவுக்கும் தோணியிருக்குது. ஆனாலும் ரெண்டு பேரும் திருமணமும் செஞ்சிகிட்டாங்க. அதன் ரிசல்ட்டா காமாட்டிபுராவிலே நான் பிறந்தேன். அப்ப்டி நான் பிறந்த பிறகும் என்னோட குடும்பம் காமாத்திபுராவை விட்டு வெளியேறி விட முடியவில்லை. அங்கேயே உள்ள பழக்க வழக்கங்களுடன்தான் நானும் வளர்ந்தேன். எனது அம்மா என்னை ஸ்கூலில் சேர்த்தார்.

அப்பிடி அங்கே வளர வளரத்தான் இந்த சமூகத்தில் பல்வேறு பிரச்னைகளை நான் எதிர் கொள்ள வேண்டியது இருந்தது. ஒவ்வொரு இடத்திலும் நான் தனிமைப்படுத்தப்படுவதை ஃபீல் பண்ணினேன். ஸ்கூலுக்கு போனால் என் கிளாஸ் மாணவிங்கக் கூட என்னிடம் பேச மாட்டாங்க. அதாவது கறுப்பாக ரெட்லைட் ஏரியாவில் இருந்து ஒரு பெண் வந்தால் என்ன மரியாதை கிடைக்குமோ அதுதான் எனக்கு பள்ளியில் கிடைத்தது. விளையாடிலும் என்னைச் சேர்த்துக்க மாட்டார்கள். அது மட்டுமில்லாமஎனக்கு பின்னால் இருந்து ‘காக்கா’ ‘எருமை மாடு’ என்றெல்லாம் கிண்டலடிப்பார்கள். ஒரு வரியில் சொல்வதானால் அந்த பள்ளியில் நான் ஒரு தீண்டத் தகாதவளாகத்தான் இருந்தேன்.

ஒரு கட்டத்தில் எல்லாமே எனக்கு எதிராகவே போய்க் கொண்டிருந்தது. யாரும் என்னைச் சீண்ட மாட்டார்கள். இதனால், எப்போதும் நான் தனியாகவே இருப்பேன். இந்த சமயத்தை பயன்படுத்தி என்னோட வாத்தியார் ஒருவர் என்னை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி கொண்டார். அப்போது எனக்கு என்ன வயசிருக்குமுன்னு நெனக்கிறீங்க? பத்தே பத்து வயசுதான் ஆகியிருந்தது., அதுனாலே அப்போ நான் கெடுக்கப்பட்டது கூட தெரியாது அல்லது புரிஞ்சிக்கலை.

ஏன்னா ‘எது குட் டச்..’ ‘எது பேட் டச்… ‘என அப்போது எனக்கு யாரும் சொல்லித் தரலை. நமது கல்வி முறையும் அப்படி. நான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட விஷயத்தைக் கூட 16 வயது வரை வெளியே சொல்லவில்லை. ஆனா. எனக்கு விபரம் தெரிந்த பிறகு, காமாத்திபுராவில் ‘குட் டச் எது பேட் டச் எது எனத் தெருவோர நாடகங்கள் நடத்தத் தொடங்கினேன். மாதவிடாய் குறித்து சிறுமிகளுக்கு சொல்லிக் கொடுத்தேன். செக்ஸ் என்றால் என்னான்னு விளக்கினேன். இதுனாலே ஒரு கட்டத்தில் போலீஸே கூட என்னைத் துரத்தியிருக்கிறது. வழக்கமா இங்கே சிறுமிகள் அனுபவரீதியாக செக்ஸ் பெறும் இடம் என்பது அந்த போலீசின் கண்மூடித்தனமான கருத்து.

இதுக்கிடையிலே எனது அப்பாவும், அம்மாவும் 2013ம் ஆண்டு கேரளாவிலே போய் செட்டிலாகி விட்டனர். ஆனாக்க, நான் மும்பையை விட்டு நகரலை. காமாத்திபுராதான் என்னோட ஊரு. அங்கதான் என்னோட அழகான வீடு. அன்பு சூழ் உலகம். இங்கே என்னைச் சுற்றியிருக்கும் பெண்கள் அன்பு நிறைந்தவர்கள். வெள்ளந்தி மனுஷிகள். அவங்களை விட்டு பிரிய எனக்கு கொஞ்சம் கூட மனசில்லை அங்கிருக்கற பெரியவங்க என்னை மகளைப் போலவே பார்த்துக்கிறாங்க. சில மாசத்துக்கு முன் நடந்த ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வருது. அங்கிருக்கற ரோட்டை கடந்த போது, ஒரு கார் டிரைவர் எனது காலில் காரை ஏற்றி விட்டார். அந்த டாக்சி டிரைவருக்கு காமாத்திபுரா உயிர்களை யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்து விடலாம் . இங்கே நடமாடுறவங்க அழுக்கு ஆத்மாக்கள் என்ற எண்ணத்தில் அலட்சியமாக சிரித்தான். ஆனால், அந்த காரை மறித்து நிறுத்திய எங்கள் பெண்கள் , அந்த கார் டிரைவரை கீழே இறங்கச் சொன்னார்கள். ‘நீ எப்படி எங்க மகள் காலில் காரை ஏற்றலாம்… மரியாதையா மன்னிப்பு கேள்” அப்ப்டீன்னு கெரோ செய்தார்கள். மன்னிப்பு கேட்க மறுத்த அந்த ஓட்டுநர், என்னை பலமுறை ஏற இறங்கப் பார்த்தார். கீழ்த்தரமான சைககளை காட்டினார். ஆனா எங்க ஜனங்க ரியாக்ட பண்ணியதைப் பார்த்து மிரண்டு போய் மன்னிப்பு கேட்டுவிட்டுதான் அந்த இடத்தில் இருந்து அந்த டிரைவரால் போக முடிந்தது.

ஆக.. என்னை பொறுத்தவரை காமாட்டிபுராதான் பாதுகாப்பான இடம். இங்கே என்னை யாரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தலை. ஆனாலும், நான் படிச்ச பள்ளியில்தான் என்னை ஆசிரியர் தனது இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டதை இப்போ நெனச்சாலும் வேதனையா இருக்குது.. இங்கே என்னை ஆண்கள் அணுகினாலும் பாதுகாப்புக்கு ஏராளமான தாயார்கள் இருக்கிறார்கள். அதனால்தான் நான் இங்கு வசிக்கிறேன். வசிக்கப் போகிறேன். வசிப்பேன். சான்பிரான்சிஸ்கோ வில் ‘கேர்ள் ஆன் தி ரன் ‘ நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தேன். அங்கேயிருந்த மக்கள் என்னை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். எனது வர்ணத்தை ஏற்றுக கொண்டார்கள். எனது பின்புலத்தை ஆராயவில்லை. எனது கதையை ஆர்வத்துடன் காது கொடுத்துக் கேட்டார்கள்.

அங்கே செக்ஸை பற்றி சுதந்திரமா உரக்கப் பேசினேன். பாலியல் கல்வி பற்றி நிறையப் பேசினேன். செக்ஸ் பற்றி பேசியதற்காக என்னை எந்த போலீசும் அங்கே விரட்டவில்லை. அங்கே நான் நிறையக் கற்றுக் கொண்டேன். அங்கே கற்றதை வைத்து எனது அழகான இந்த வீட்டை வேதனைகள் இல்லாத சொர்க்கமாக மாற்றுவேன். சக மனிதர்கள் ஏற்றுக் கொள்ளும் இடமாக மாற்றுவேன். நீங்கள் வெள்ளையாக இருக்கலாம். நான் கருப்பாக இருக்கலாம். ஆனால் யாரையும் விட நான் அழகாக கருதுகிறேன். அழகுக்கும் வர்ணத்துக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்ன? மனிதர்களுக்குள் இருக்கும் நல்ல விஷயங்களை ஏன் பார்க்கக் கூடாது?. ஏன் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது? காமாத்திபுரா யார் யாருக்கோ வேண்டுமானால் ஏதேதோ விஷயத்திற்கு சொர்க்கபூமியாக இருக்கலாம். ஆனாக்க என்னை பொறுத்தவரை தேவதைகள் வாழும் பூமின்னா இதுதான்!

Related Posts

error: Content is protected !!