தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு முழு விபரம்!
வரும் ஏப்ரல் 6–ந்தேதி முதல் மே 10–ந்தேதி வரை தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
தமிழக சட்டசபை கடந்த மார்ச் 18–ந்தேதி கூடியது. அன்றைய தினம் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022–2023 ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 19–ந்தேதி வேளாண் பட்ஜெட்டை அத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இதனை தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் 3 நாட்கள் நடைபெற்றது. 24–ந்தேதியுடன் முதல் அமர்வு நிறைவு பெற்றதையடுத்து, தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு, மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்காக ஏப்ரல் 6–ந்தேதி தொடங்கும் என்றும்,
எத்தனை நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும், எந்தெந்த நாட்களில் எந்தெந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என்பது குறித்து எனது தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் மே 10–ந்தேதி வரை நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக வருகிற ஏப்ரல் 6–ந்தேதி தேதி காலை 10 மணிக்கு தமிழக சட்டசபை மீண்டும் கூட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:–
ஏப்ரல் 6–ந்தேதி (புதன்கிழமை) – நீர்வளத் துறை
7–ந்தேதி (வியாழக்கிழமை) –நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
8–ந்தேதி (வெள்ளிக்கிழமை) – கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
9–ந்தேதி (சனிக்கிழமை) மற்றும் 10–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) – அரசு விடுமுறை
11–ந்தேதி (திங்கட்கிழமை) – உயர் கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறை
12–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) – நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டடங்கள்
13–ந்தேதி (புதன்கிழமை) – வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு , மீன்வளம் மற்றும் மீனவர் நலன், பால்வளம்
14–ந்தேதி (வியாழக்கிழமை) தமிழ்ப்புத்தாண்டு, 15–ந்தேதி (வெள்ளிக்கிழமை) புனித வெள்ளி – அரசு விடுமுறை
16–ந்தேதி (சனிக்கிழமை), 17–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) – அரசு விடுமுறை
18–ந்தேதி (திங்கட்கிழமை), வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு
19–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) – நீதி நிருவாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள், சட்டத்துறை, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு
20–ந்தேதி (புதன்கிழமை) – வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, – குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை
21–ந்தேதி (வியாழக்கிழமை) மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை
22–ந்தேதி (வெள்ளிக்கிழமை), பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
23–ந்தேதி (சனிக்கிழமை), 24–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) – அரசு விடுமுறை
25–ந்தேதி (திங்கட்கிழமை) – வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை
26–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) – எரிசக்தித்துறை, மதுவிலுக்கு மற்றும் ஆயத்தீர்வை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை
27–ந்தேதி (புதன்கிழமை) – தொழில் துறை, தமிழ் வளர்ச்சி
28–ந்தேதி (வியாழக்கிழமை) – கைத்தறி மற்றும் துணிநூல், கதர், கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள், வணிக வரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப் பதிவு
29–ந்தேதி (வெள்ளிக்கிழமை) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை
30–ந்தேதி (சனிக்கிழமை), மே 1–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) – அரசு விடுமுறை
2–ந்தேதி (திங்கட்கிழமை) – பேரவைக் கூட்டம் இல்லை
3–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ரம்ஜான் – அரசு விடுமுறை
4–ந்தேதி (புதன்கிழமை) – இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள் – நிருவாகம், போக்குவரத்துத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை
5–ந்தேதி (வியாழக்கிழமை) – இந்து சமய அறநிலையத் துறை, சுற்றுலா – கலை மற்றும் பண்பாடு
6–ந்தேதி (வெள்ளிக்கிழமை) – ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
7–ந்தேதி (சனிக்கிழமை) – காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்
8–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) – அரசு விடுமுறை
9–ந்தேதி (திங்கட்கிழமை), காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்
பதிலுரை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, நிதித் துறை, மனித வள மேலாண்மைத் துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும்
10–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பொதுத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை, அரசினர் சட்டமுன்வடிவுகள் – ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும், எனைய அரசினர் அலுவல்கள்
இவ்வாறு சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.