106 நாட்கள் திகார் சிறையில் அடைப்பட்டு இருந்த ப. சிதம்பரம் ஜாமீனிலி ரிலீஸ்!

106 நாட்கள் திகார் சிறையில் அடைப்பட்டு இருந்த ப. சிதம்பரம் ஜாமீனிலி ரிலீஸ்!

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் ப. சிதம்பரத் துக்கு சுப்ரீம் கோர்ட் இன்று ஜாமீன் வழங்கியதையடுத்து, அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இவ்வழக்கில், கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்ட சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதில், சிபிஐ வழக்கில் ஜாமீன் பெற்ற ப.சிதம்பரம், அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் 105 நாட்களுக்கும் மேலாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட் நவம்பர் 15ம் தேதி தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து ப.சிதம்பரம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஜாமீன் மனு மீது நடைபெற்ற விசாரணை கடந்த நவம்பர் 28ம் தேதி முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இவ்வழக்கில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு ஜாமீன் வழங்கி இன்று தீர்ப்பு வழங்கியது. மேலும், சுப்ரீம் கோர்ட் அவருக்கு சில நிபந்தனை களையும் வைத்துள்ளது. அதில்,”ப.சிதம்பரம் பேட்டி தரவோ, அறிக்கை விடவோ கூடாது. சாட்சி களை மிரட்டவோ, கலைக்கவோ கூடாது. பாஸ்போர்ட்டை திரும்பப் பெறும் முயற்சியில் ஈடுபடக்கூடாது. வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது. விசாரணை அதிகாரிகள் அழைக்கும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும். பிணைத் தொகையாக ரூ.2 லட்சம் பணம் செலுத்தவேண்டும்” என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

எனவே, ப. சிதம்பரம் 106 நாள்களுக்குப் பிறகு தற்போது சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.அவரை வரவேற்க சிறை வளாகத்தின் வெளியே கூடிய காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக கோஷம் எழுப்பி அவரை வரவேற்றனர்.

Related Posts

error: Content is protected !!