முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா நோய்த்தொற்று உறுதி!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா நோய்த்தொற்று உறுதி!

கொடுங்தொற்றான கொரோனா வைரசின் இரண்டாவது அலை இந்தியாவை பாடாய்படுத்தி எடுத்து வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்க கொண்டிருக்கும் நிலையில், இறப்பு என்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருப்பது பீதியை கிளப்பியுள்ள நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததையடுத்து கோவிட் டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. அதில் பாசிடிவ் என வந்ததால் தற்போது அவர் எய்மஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

உலகெங்கிலும் உள்ள மொத்த கொரோனா பாதிப்பு (Coronavirus) எண்ணிக்கை 141 மில்லியனுக்கும் அதிகமாகவும், இறப்பு எண்ணிக்கை 3 மில்லியனுக்கும் அதிகமாகவும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக, தினமும் இரண்டு லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசிகள் கேட்டும், படுக்கைகள் கேட்டும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 10,941 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில்தான், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு (Manmohan Singh) கொரோனா உறுதியாகியுள்ளது. மன்மோகன் சிங் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக நேற்று இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அதில்., இந்தியா தற்போது அவசர நிலையை எதிர்கொண்டு வருவதாகவும், கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராட தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்து, அதற்கு ஐந்து பரிந்துரைகளை அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!