ஸ்வீட் அதிகம் சாப்பிட்டதாலே உயிர் விட்ட முன்னாள் பாக்ஸர்!
உணவின் சுவைக்கு அடிமையாகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பசிக்கு சாப்பிடுபவர்கள் சிலர் இருந்தாலும் இன்றைக்கு பெரும்பாலும் உணவின் ருசிக்காகவே சாப்பிடுகின்றனர். அதே சமயம் வாயில் உள்ள பாக்டீரியாக்கள், ஒரு வித அமிலத்தை உருவா க்கும், இந்த அமிலம், பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி, பல்லில் சேதத்தை ஏற்படுத்தும், சீனியும் கொழுப்பும் உள்ள உணவுப் பொருட்கள், இரத்தத்தில் “கொலஸ் டேரால்” அளவை அதிகரித்து விடுவதால் இருதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் இரத்தம், ஒட்சிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைப் படுகின்றன. இது தொடருமானால் ஒருவருடைய தசை நார்கள் இறந்து போய், மாரடைப்பை ஏற்படுத்தும், இந்நிலையில் பாரம்பரிய இனிப்புப் பண்டத்தை யார் அதிகம் சாப்பிடுவது என்ற போட்டியில் கலந்து கொண்ட தென் அமெரிக்காவின் புகழ்மிக்க முன்னாள் குத்துச்சண்டை வீரர் மரியோ மெலொ மூச்சுத்திணறி உயிரிழந்தார். குத்துச்சண்டை வீரர் மரியோ மெலொ உயிர் இழந்ததை நேற்று (திங்கள்கிழமை) அவரது சகோதரி ஆயிதா மெலொ அறிவித்தார்.
அர்ஜெண்டினாவின் ‘மிடியாலுனா’ எனப்படும் பாரம்பரிய இனிப்புப் பண்டத்தை சாப்பிடும்போட்டி நடைபெற்றது. இதில் தனது சகோதரரும் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்ட போது நிகழ்ச்சி நடத்துபவரின் பின்புறம் திடீரென மூச்சுத்திணறி சரிந்துவிழுந்துவிட்டதாக ஒரு உள்ளூர் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார். அவர் எப்போதும் தனது நகைச் சுவையால் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கக்கூடியவர் என்பது மக்களுக்குத் தெரியும். ஆனால் போட்டியின் போது திடீரென உதவி வேண்டி போட்டி நடத்துபவரிடம் கோபமாக சைகை செய்துள்ளார்.
போட்டி ஆரம்பிப்பதற்கு முன் மேடையில் வைக்கப்பட்டிருந்த அர்ஜெண்டினாவின் பாரம்பரிய ஸ்வீட் ‘மிடியாலுனா’ போட்டியின் போது இவ்வாறு ஏற்பட்டதால் இறுதியாக பார்வையாளர் களிடமிருந்து ஒரு டாக்டர் வரவழைக்கப்பட்டார், பின்னர் பினாமரில் உள்ள ஒரு உள்ளூர் மருத்துவ மனைக்கு மரியா மெலோ கொண்டு செல்லப் பட்டதாகவும் பின்னர் ஞாயிற்றுக்கிழமை அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் மரியா மெலொவின் சகோதரி ஆயிடா மெலோ கூறினார்.
மரியா மெலொ, 1980கள் மற்றும் 90களில் தென்அமெரிக்காவின் ஹெவிவெய்ட் சாம்பியனாக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.