கேரள கன்னியாஸ்திரி நீக்கம் : வாடிகனுக்கு புகார்!

கேரள கன்னியாஸ்திரி நீக்கம் :  வாடிகனுக்கு புகார்!

கேரளாவில் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிஷப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரி லக்கி கலப்புரா, பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையில் இருந்து தான் நீக்கப் பட்டதை எதிர்த்து வாடிகனில் புகார் மனு அனுப்பியுள்ளார்.

பஞ்சாப் , ஜலாந்தரை சேர்ந்த , பிஷப் பிராங்கோ மூலக்கல் என்பவர் தனக்கு கீழ் பணியாற்றிய கேரள கன்னியாஸ்திரி ஒருவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் சிக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி லக்கி கலப்புரா என்ற கன்னியாஸ்திரி, மேலும் சில கன்னி யாஸ்திரிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினார்.இந்நிலையில் லக்கி கலப்புராவின் வாழ்க்கை முறை குறித்து புகார் கூறப்பட்டதையடுத்து ரோமன் கத்தோலிக்க தேவாலாயத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் எப்.சி.சி. எனப்படும் ‘பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட்’ சபையிலிருந்து இது குறித்து விளக்கம் அளிக்கும்படி லக்கி கலப்புராவுக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பியது.

லக்கி கலப்புரா அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என கூறி அவரை சபையிலிருந்து நீக்குவதாக முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.சபையின் முடிவை எதிர்த்து வாடிகனில் புகார் கூறியிருந்தார் லக்கி கலப்புரா.இது குறித்து லக்கி கலப்புரா கூறுகையில், என்னை நீக்கியது ரோமன் கத்தோலிக்க விதிமுறைகளுக்கு முரணானது. முடிவை எதிர்த்து நேற்று (ஆக.16) வாடிகனுக்கு இ.மெயில் மூலம் புகார் அனுப்பியுள்ளேன். இன்று தபால் மூலம் கடிதமும் அனுப்பியுள்ளேன்.சட்ட போராட்டம் மூலம் சந்திக்க தயாராக உள்ளேன் என்றார்.

error: Content is protected !!