எமிரெட்ஸ் விமான விபத்து : அவசர கால எண்கள் அறிவிப்பு

எமிரெட்ஸ் விமான விபத்து : அவசர கால எண்கள் அறிவிப்பு
இன்று காலை கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து துபாய்க்கு சென்ற ஏகே521 என்ற எமிரேட்ஸ் நிறுவன போயிங் விமானம்,இன்று மதியம் 12.50 மணி அளவில் துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ முற்றிலும் அணைக்கப்பட்டுவிட்ட நிலையில்,விமானத்தில் இருந்த பயணிகளின் நிலை குறித்த தகவல் ஏதும் கிடைக்காமல் இருந்தது.இந்நிலையில் ஏகே521 விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாக எமிரேட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
flightr au 2

ஏகே521 விமானத்தில் 282 விமானிகளும் 18 ஊழியர்கள் இருந்ததாகவும்,இவர்களில் 226 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.விபத்து காரணமாக துபாய் விமான நிலைய பணிகளில் எட்டு மணி நேர தாமதம் ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்த பயணிகள் குறித்த தகவல்களை பெற அவசர கால எண்கள் எமிரேட்ஸ் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருவனந்தபுரம்-0471-3377337
ஐக்கிய அரபு அமீரகம் – 8002111
பிரிட்டன்- 00442034508853
அமெரிக்கா – 0018113502081
 
error: Content is protected !!