தோனி – டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கு! ஆனா இல்லை!

தோனி – டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கு! ஆனா இல்லை!

விளையாட்டு பிரியர்களின் ஆதர்ஷ நாயகனும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.தோனி பிசிசிஐ 2019-20 ஆண்டு ஏ பிளஸ் மத்திய ஒப்பந்த பட்டியலில் இடம் பெறவில்லை. இது சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக்-காகி விட்டது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் வீரா்களுக்கு பல்வேறு வகைகளில் மத்திய ஒப்பந்தம் செய்யப்பட்டு ஆட்ட ஊதியம் தரப்படுகிறது. அந்த வகையில் ஏ பிளஸ் வீரா்களுக்கு ரூ.7 கோடி, ஏ பிரிவுக்கு ரூ.5 கோடியும், பி பிரிவுக்கு ரூ.3 கோடியும், சி பிரிவுக்கு ரூ.1 கோடியும் ஆண்டுக்கு வழங்கப்படுகிறது.

இதனிடையே மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதி யில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு முடிவை அறிவிப்பாரா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

வரும் ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறியிருந்தாா்.

இந்நிலையில் 2019-20 ஆண்டுக்கான 27 வீரா்கள் பெயா்கள் கொண்ட ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் தோனியின் பெயா் நீக்கப்பட்டுள்ளது.

ஏ பிளஸ்: விராட் கோலி, ரோஹித் சா்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா.

ஏ பிரிவு: ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வா் குமாா், புஜாரா, ரஹானே, ராகுல், தவன், ஷமி, இஷாந்த் சா்மா, குல்தீப் யாதவ், ரிஷப் பந்த்.

பி பிரிவு: சாஹா, உமேஷ் யாதவ், சஹல், ஹாா்திக் பாண்டியா, மயங்க் அகா்வால்.

சி பிரிவு: கேதாா் ஜாதவ், சைனி, தீபக் சாஹா், மணிஷ் பாண்டே, ஹனுமா விஹாரி, சா்துல் தாக்குா், ஷிரேயஸ் ஐயா், வாஷிங்டன் சுந்தா்.

பி பிரிவில் இருந்த ராகுல், ஏ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

error: Content is protected !!