தடுப்பூசி முன்பதிவுக்கான போலி செயலிகள் – சைபர்கிரைம் எச்சரிக்கை

தடுப்பூசி முன்பதிவுக்கான போலி செயலிகள் – சைபர்கிரைம் எச்சரிக்கை

ந்தியாவில் மே மாதம் 1-ம் தேதி முதல் மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்துதல் துவங்கப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் http://cowin.gov.in என்ற வலைதள முகவரியிலோ அல்லது ஆரோக்கிய சேது மற்றும் UMANG செயலி மூலமாகவோ தடுப்பூசிக்காக தங்களை பதிவு செய்து கொள்ளலாம். சமூக ஊடகங்களில் தடுப்பூசி பதிவு குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

சைபர் குற்றவாளிகளின் தந்திரங்கள்:

• டெலிகிராம் செயலி மூலம் தடுப்பூசிக்கான பதிவுகள் நடைபெறுவதாக சமூக ஊடகங்களில் மூலம் தகவல்கள் பரப்பப்படுகின்றன.

• சில வலைத்தளங்கள் மற்றும் செயலிகள் தங்களிடம் தடுப்பூசிக்கான பதிவுகள் நடைபெறுவதாக கூறியுள்ளன.

பரிந்துரைக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

• கொரோனா தடுப்பூசிக்கான பதிவுகள் http://cowin.gov.in என்ற வலைதளம் மூலமாகவும்¸ ஆரோக்கிய சேது அல்லது UMANG செயலி மூலமாக மட்டுமே பதிவு செய்யவேண்டும்.

• டெலிகிராம் செயலி மூலமாக தடுப்பூசிக்கு பதிவு செய்து கொள்ளலாம் என்ற சமூக வளைத்தலங்கில் வரும் அனைத்து பதிவுகளும் போலியானவை¸ அவற்றில் பதிவு செய்யக்கூடாது.

• தங்களுடைய சுய விவரங்களை http://cowin.gov.in என்ற வலைதளம் அல்லது ஆரோக்கிய சேது அல்லது UMANG செயலி போன்றவற்றை தவிர்த்து பிற தடுப்பூசி பதிவு செய்ய விழையும் எந்த வலைதளத்திலும் பதிவிடவேண்டாம்.

• கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்வதாக கூறும் ஏதேனும் வலைத்தளம் அல்லது செயலிகளை கண்டால் https://cybercrime.gov.in/ என்ற வலைத்தளத்தில் புகார் அளிக்கவும்.

error: Content is protected !!