Cow Hug Day: அறிவிப்பைத் திரும்பப் பெற்றது விலங்குகள் நல வாரியம்!

Cow Hug Day: அறிவிப்பைத் திரும்பப் பெற்றது விலங்குகள் நல வாரியம்!

ர்வதேச அளவில் ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிப்ரவரி 14-ஆம் தேதி பசு அணைப்பு தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என இந்திய விலங்குகள் நல வாரியம் அறிவித்திருந்தது. சமூக வலைதளங்களில் இந்த அறிவிப்பானது சர்ச்சைக்குள்ளப்பட்டதோடு, பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்களும் எழுந்தன. ஏராளமான விமர்சனங்கள், கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், பசு அணைப்பு தின அறிவிப்புக்கு எழுந்த எதிர்ப்பையடுத்து அதனைக் கைவிடுவதாக விலங்குகள் நல வாரியம் தற்போது அறிவித்துள்ளது.

முன்னதாக பசுவின் மகத்தான நலனை கருத்தில் கொண்டு கடந்த 6-ம் தேதி வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் பிப்ரவரி 14 அன்று பசுக்களை கட்டிபிடித்து கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது. ஒவ்வொரு பசு நேசரும் இதைச் செய்ய வேண்டும் என வாரியம் தெரிவித்தது. பசு இந்திய கலாச்சாரம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்றும் அப்போது அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது பாசிட்டிவ் எனர்ஜியை கொண்டு வரும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வேண்டுகோளை அடுத்து, இந்திய அளவில் பசுக்களை கட்டிப் பிடிக்கும் இந்த விவகாரம் கவனம் பெற்றது. சிலர் மீம்ஸ் போட்டு இதை விமர்சித்திருந்தனர். அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் இந்த அறிவிப்பை கடுமையாக விமர்சித்தனர்.

காதலர் தினத்தை சிதைக்கும் முன்னெடுப்பு என்று அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்தச் சூழலில், விலங்குகள் நல வாரியம் தற்போது தமது அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளது.

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம் மற்றும் அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 14-ம் தேதி அன்று பசு அணைப்பு தின கொண்டாட்டம் திரும்பப் பெறுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!