காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் ; அறிவிப்பாணை வெளியீடு!

காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் ; அறிவிப்பாணை வெளியீடு!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள  அறிவிப்பாணையை அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு இன்று வெளியிட்டது.

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் சோனியா காந்தி மிக நீண்ட காலமாக இருந்து வந்தார். கடந்த 2017 முதல் 2019ம் ஆண்டு வரை ராகுல் காந்தி தலைவராக இருந்தார்.

தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடர் தோல்விகளை சந்தித்ததால், தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதையடுத்து இடைக்கால தலைவராக சோனியா இருந்து வருகிறார். இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தம் தேவை என கோரிக்கை விடுத்து கபில் சிபல், குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினர். இதனால் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என காங்கிரஸ் மேலிடம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி கட்சி தலைவர் தேர்தல் அறிவிப்பை காங்கிரஸ் தேர்தல் குழு இன்று வெளியிட்டது.

அதன்படி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் மாதம் 17–ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து காங்கிரஸ் தலைமை அலுவலகங்களிலும் நடைபெறும்.

வேட்புமனு தாக்கல் வரும் சனிக்கிழமை (24–ந்தேதி ) தொடங்கி இந்தமாதம் 30–ந் தேதி வரை நடைபெறும். வேட்பு மனு மீதான பரிசீலனை அக்டோபர் 1–ந்தேதியும், வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள் 8–ந்தேதியும், அன்றைய தினமே போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட உள்ளது.

வாக்குகளின் எண்ணிக்கை 19–ந்தேதிதேதி காலை 10 மணிக்கு தொடங்கும். முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் மூத்த தலைவர்கள் சசிதரூர், திக்விஜய் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் போட்டிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

10 மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், கட்சி தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி வரவேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!