March 25, 2023

சின்னத்திரை உதவி இயக்குநர்களுக்கு உரிய சம்பளம் குடுங்கப்பூ! – பாக்யராஜ் சிபாரிசு!

தமிழகத்தின் தனி பெரும் ஊடக உலகமான சின்னத்திரையில் பணிபுரியும் அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப் பட்டு வருகிறது. ஆனால், உதவி இயக்குநர்களுக்கு மட்டும் எந்தவிதமான ஒப்பந்தமும் இதுவரை போடவில்லை. இது தொடர்பாக பல வருடங்களாக சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேசியும், கடிதம் எழுதியும், அவர் ஒப்பந்தம் செய்ய மறுக்கிறார்கள். ஆகவே உதவி இயக்குநர்களுக்கு உரிய சம்பளத்தை பெற்றுத் தர, சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரத அற வழிப் போராட்டம் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையிலும் சேப்பாக்கம், அரசு விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்றது. சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் தலைவரான இயக்குநர் தளபதி, இந்த உண்ணாவிரதத்திற்கு முன்னிலை வகித்தார்.

சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் C.ரங்கநாதன், பொருளாளர் M.K.அருந்தவராஜா, துணை தலைவர்கள் B.நித்தியானந்தம் & அறந்தாங்கி சங்கர், இணைச் செயலாளர்கள் T.R.விஜயன் & S.கிஷ்ணப்பர் அலிகான் மற்றும் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும், சங்கத்தின் 300-க்கும் அதிகமான உதவி இயக்குநர்களும் இந்த அற வழிப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை இயக்குநர் கே.பாக்யராஜ் துவக்கி வைத்து பேசிய போது, “உதவி இயக்குனர்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது இயக்குனர்கள் தான். எங்களுக்கு உதவி இயக்குனர்கள் தேவை என்று இயக்குனர்கள் தான் பேசி புரிய வைக்க வேண்டும். ஒரு தொடருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சம், ரூ.1.5 லட்சம் என்று கொடுக்கிறார்கள். சில தொடர்களுக்கு ரூ.75 ஆயிரம் கூட பெற்று கொண்டு எடுக்கிறார்கள். ஆகையால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இதற்கு என்னால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வேன்.

வெள்ளித்திரையாக இருந்தாலும் சரி சின்னத்திரையாக இருந்தாலும் சரி ஒரு சிலருக்கு தான் மார்க்கெட் இருக்கிறது. அப்படி மார்க்கெட் இருக்கிறவர்கள் தங்களுடைய உதவி இயக்குனர்களுக்கு ஒரு கணிசமான தொகையை அளிக்க வேண்டும். இந்த தொகையை வைத்துக் கொண்டு அவர் களை ஒரு சிறிய வீடு கூட ஒரு சிறிய வீடு கூட கட்ட முடியாது. உங்களுக்கு வரும் வருமானத் தைக்  கொண்ட கார் வாங்க முடியாது ஒரு சிறிய இரண்டு சக்கர வாகனம் வாங்கி மகிழ்வதற்கு ஏற்ற வகையில் ஊதியம் கொடுக்க வேண்டும். எவ்வளவு ஊதியம் பெறுகிறார்கள் என்று தெரியா மல் இருப்பது வருத்தத்திற்குரியது. சின்னத்திரை உதவி இயக்குனர்களுக்கு சம்பள நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது ” என்றார்.

இந்த உண்ணாவிரதத்தில், முன்னாள் ஃபெஃப்சி தலைவர் நடராஜ் மற்றும் ராதாரவி, K.S.ரவிகுமார், (Cine Music Union) தலைவர் தீணா, K.ராஜன், நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இயக்குநர் R.V.உதயகுமார் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.