பாஜக புது நிர்வாகிகள் பட்டியல் : தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் இடமில்லை!

பாஜக புது நிர்வாகிகள் பட்டியல் : தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் இடமில்லை!

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை.

பா.ஜ.க, துணைத்தலைவர்களாக ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ராமன் சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பா.ஜ.,வில் தேசிய துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகளை அக்கட்சி தலைவர் ஜேபி நட்டா நியமித்துள்ளார். அதன்படி 12 துணைத் தலைவர்கள், 8 பொதுசெயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய நாட்களில் மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் அடுத்த ஆண்டு அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை அனைத்து தரப்பினரும் தயாராகி வருகின்றனர். தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ள நிலையில் பல கட்சிகள் தங்கள் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் வேலையில் இறங்கியுள்ளன.

இந்நிலையில், தேர்தலை கருத்தில் கொண்டு பாரதிய ஜனதா கட்சியும் தனது கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் சத்திஷ்கர் முன்னாள் முதல்மந்திரி ராமன் சிங், ராஜஸ்தான் முன்னாள் முதல்மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா, முன்னாள் மத்திய மந்திரி ராதா மோகன் சிங் உள்ளிட்டோர் பாஜக கட்சியின் துணைத்தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், பாஜக-வின் தேசிய நிர்வாகிகள் பட்டியலில் எச்.ராஜா உள்பட தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை.

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ரமன்சிங், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, ராதாமோகன் சிங், பைஜெயந்த் ஜெய பான்டா, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர், ரகுபர்தாஸ், முகுல்ராய், ரேகா வர்மா, அன்பூர்ணா தேவி, பார்திபென்ஷியால், அருணா, சுபா, அப்துல்லா குட்டி ஆகியோர்கள் துணை தலைவர்களாக நியமணம் செய்யப்பட்டுள்ளனர்.

பூபேந்தர் யாதவ், அர்ஜூன்சிங், கைலாஷ் விஜயவர்க்கியா, துஷ்யந்த் குமார் கவுதம், புரந்தேஸ்வரி, ரவி, தருண் சவுக், திலிப் கைகியா ஆகியோர் தேசிய பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!