முத்தலாக் மசோதா: மாநிலங்களவையில் நிறைவேறியது!

முத்தலாக் மசோதா: மாநிலங்களவையில் நிறைவேறியது!

எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே இன்று மாநிலங்களவையில் திருத்தப்பட்ட முத்தலாக மசோதா நிறைவேற்றப்பட்டது.

முத்தலாக் முறை, தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் மசோதா, கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. மசோதாவின் சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவை நீக்கப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது. எனினும் மாநிலங்களவையில் காங்கிரஸ், திரிணாமூல், திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று வலியுறுத்தின. ராஜ்யசபாவில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், மசோதா நிறைவேறாமல் நிலுவையில் இருந்தது.

சமீபத்தில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், முத்தலாக் தடை மசோதா காலாவதியானது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே, மக்களவையில் முத்தலாக் மசோதா வை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடந்த மாதம் 21-ஆம் தேதி தாக்கல் செய்தார். இந்த நிலையில், இந்த மசோதா மீது கடந்த ஜூலை 25-ஆம் நாள் மக்களவையில் விவாதம் நடை பெற்றது. பின்னர், திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மக்களவையில் திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது பெரும் எதிர்ப்புகள் எழுந்தன. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இது சிறுபான்மையினரின் உரிமையை பறிக்கும் செயலாகும் என விமர்சித்தன. ஓட்டு சேகரிப்பில் முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவான ஓட்டுகள் அதிகமானதால் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இறுதியில் வாக்கு எண்ணிக்கையில் ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் கிடைத்தது.

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:

அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமாரும் மக்களவையில் அதற்கு ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் காங்கிரஸ், திமுக கட்சிகள் எதிராக வாக்களித்தன.

error: Content is protected !!