பாக்யராஜ் ராஜினாமாவை ஏற்க மாட்டோம் – தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம்

பாக்யராஜ் ராஜினாமாவை ஏற்க மாட்டோம் – தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம்

 

ஏ.ஆர் முருதாஸின் சர்கார் பட கதை விவகாரத்தால் மிகவும் மனவேதனை அடைந்த பாக்யராஜ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பாக்யராஜின் ராஜினாமாவை ஏற்க தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் மறுப்புத் தெரிவித்து உள்ளது. பாக்யராஜ் தொடர்ந்து தலைவர் பதவியை வகிக்க வேண்டும் என்று அவரது ராஜினாமா வை சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டதால், பாக்யராஜே தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என திரைப்பட எழுத்தாளர் சங்க பொதுச்செயலாளர் மனோஜ் குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 6 மாதத்திற்கு முன் எழுத்தாளர் சங்க தலைவராக  பதவியேற்ற பாக்யராஜ் வெளியிட்ட அறிக்கையில்,

​ pk

​ pk

​ pk

 

என்று பாக்யராஜ் குறிப்பிட்டுள்ளார். இதனை அவர் சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பிலும் அறிக்கையாக வாசித்துவிட்டு சென்றார்.

இதனிடையே, பாக்யராஜின் ராஜினாமாவை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் ஏற்க மறுத்துள்ளது. இது குறித்து அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் மனோஜ்குமார் வெளியிட்டுள்ள தகவலில், சங்க நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் பாக்யராஜின் ராஜினாமை ஏற்க மறுத்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதனால் பாக்யராஜ் தலைவராக தொடர வேண்டுமென்பது செயற்குழுவின் தீர்மானமாக எடுக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!