ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ குழு ஆலோசனை!

ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ குழு ஆலோசனை!

ரசிகர்கள் யாருமே இல்லாமல் ஐபிஎல் தொடரை இந்த ஆண்டே நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் பிசிசிஐ எடுத்துவருவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த தொடக்கத்தில் இந்தியாவெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த மார்ச்25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. 21 நாட்கள் முடிவடைந்த ஊரடங்கு மீண்டும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. மேலும் அடுத்தடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு 5ம் கட்டமாக தற்போது நடைமுறையில் உள்ளது. இருப்பினும் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கியது. அதில், 50% ஊழியர்களுடன் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி, தனிக் கடைகள், மால் அல்லாத வணிக வளாகங்கள் இயங்க அனுமதி, கோயிகள் திறக்க அனுமதி, மது கடைகளுக்கு அனுமதி, ஹோட்டல்களில் உணவருந்த அனுமதி, சலூன் கடைகளுக்கு அனுமதி என நிபந்தனைகளுடன் தளர்வுகள் வழங்கப்பட்டன.

அதேபோல, ரசிகர்கள் இல்லாமல் விளையாட்டு அரங்கில் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. இருப்பினும் தற்போது வரை எந்த விளையாட்டு போட்டிகளும் நடைபெறவில்லை. இதனிடையே 13 ஆவது ஐபிஎல் தொடர் மார்ச் 29 முதல் தொடங்க திட்டமிடப்பட்டது, ஆனால் கரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதாக இருந்த டி 20 உலகக் கோப்பை தொடரை ஒத்திவைக்க ஐசிசி முடிவு செய்தால் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ அனைத்து விதமான முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரை இந்த ஆண்டே நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் பிசிசிஐ எடுத்துவருவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஐபிஎல் தொடரில் விளையாடிய இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெற வேண்டும் என்ற ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஐபிஎல் தொடர் நடைபெறும் என்று நாங்களும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

ரசிகர்கள், உரிமையாளர்கள், வீரர்கள், ஒளிபரப்பாளர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களும் ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஐபிஎல் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லையென்றாலும் பரவாயில்லை, ஆனால் தொடரை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!