பங்களாதேஷ் தேர்தல் ; வன்முறையில் பலர் பலி

பங்களாதேஷ் தேர்தல் ; வன்முறையில் பலர் பலி

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. தேர்தல் தொடர்பான வன்முறைகளில் குறைந்தது பத்துப் பேர் உயிரிழந்தனர்.

வங்கதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8மணிக்குத் தொடங்கி மாலை 4மணிக்கு நிறைவடைந்தது. முந்நூறு தொகுதிகளில் மொத்தம் நாற்பதாயிரம் வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காவல்துறை, இராணுவம் ஆகியவற்றைச் சேர்ந்த 6இலட்சம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.  ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் அவாமி லீக் கட்சிக்கும் ஊழல் வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்துவரும் கலிதா ஜியா தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சிக்கும் முக்கிய போட்டி நிலவுகிறது. தேர்தலில் பல இடங்களில் மோசடிகள் நடந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. முறைகேடுகள் தொடர்பாக வேட்பாளர்களிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிரதமர் ஷேக் ஹசீனா தலைநகர் டாக்காவில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். வாக்குப்பதிவின்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வன்முறை நிகழ்வுகளில் குறைந்தது பதினைந்து பேர் உயிரிழந்ததாக வங்கதேச நாளிதழான டெய்லி ஸ்டார் குறிப்பிட்டுள்ளது. தேர்தல் வன்முறையில் 64பேர் காயமடைந்ததாகவும் அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

error: Content is protected !!