உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் :இறுதி போட்டிக்கு முன்னேறிய பி.வி.சிந்து !

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் :இறுதி போட்டிக்கு முன்னேறிய பி.வி.சிந்து !

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறி உள்ளார் பி.வி. சிந்து. இன்று சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் அரையிறுதி போட்டியில் இந்திய விராங்கனை பி.வி. சிந்து,  ஜப்பானின் அகனே யமகுச்சியை எதிர்கொண்டார்.

இதில் பி.வி. சிந்து முதல் செட்டை 21-16 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனால், யமாகுச்சி 2 வது செட்டை மிகுந்த நெருக்கடியுடன் எதிர்கொண்டார். அதன் விளைவாக இரண்டாவது செட்டில் இருவருக்கும் கடுமையான போட்டி ஏற்பட்டது. இரண்டாவது செட்டில்  இருவரும் போட்டி போட்டு புள்ளிகளை பெற்று வந்தனர். இறுதியில் பி.வி.சிந்து 24-22 என்ற கணக்கில் 2 -வது செட்டை கைப் பற்றினர். இப்போட்டியில் 21-16, 24- 22 என்ற நேர்செட்டுகளில் அகனே யமகுச்சியை வீழ்த்தி, இறுதிபோட்டிக்கு பி.வி. சிந்து முன்னேறினார்.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் பி.வி.சிந்து இதுவரை 2 வெண்கலம் மற்றும் 1 வெள்ளி உட்பட 3 பதக்கங்களை வென்றுள்ளார், தற்போது, இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் அவர் குறைந்தபட்சம் வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதனையடுத்து இறுதிபோட்டியில், ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை  எதிர்கொள்கிறார்.

error: Content is protected !!