இந்திய சுதந்திர நாளில் ஐநாவில் ஏ.ஆர் ரஹ்மான் இசைமழை!

இந்திய சுதந்திர நாளில் ஐநாவில் ஏ.ஆர் ரஹ்மான் இசைமழை!

நாட்டின் 70-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு சுதந்திர தின விழாவை ‘‘பாரத விழா’’ என்ற பெயரில் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 6 நாட்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளது. தொடக்க விழா, 12-ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்தியா கேட் பகுதியில் நடைபெறுகிறது.
a r rahman jy 30
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ராஜபாதையில் 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படும் என்றும், அனைத்து மாநிலங்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் மக்களின் பழக்க – வழக்கங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த அரங்குகள் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், பாரத விழா கலை நிகழ்ச்சிகளில் எல்லா மாநில இசை கலைஞர்களும் பங்கேற்பார்கள் என்பதுடன், ராணுவ வீரர்களின் கலை நிகழ்ச்சியும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்தியாவின் 70-வது சுதந்திர தினத்தை ஆகஸ்டு 15-ந்தேதி ஐ.நா. சபையில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு திட்டமிடப் பட்டுள்ளது. அந்த இசை நிகழ்ச்சியை பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நடத்த உள்ளார். சர்வதேச அளவில் 2 கிராமி விருதுகள், 2 அகா டமி விருதுகள், ஒரு தடவை ‘‘கோல்டன் குளோப்’’ விருது பெற்றுள்ள ஏ.ஆர்.ரகு மானுக்கு உலகம் முழுவதும் இசை ரசிகர்கள் உள்ளனர்.

அவர் எழுப்பிய ‘‘ஜெய்கோ’’ பாடல் கோஷம் உலகின் பெரும்பாலான நாட்டு ரசிகர்களை கவர்ந்தது. எனவே ஐ.நா. சபையில் ஆகஸ்டு 15-ந்தேதி அவர் நடத்தும் இசை நிகழ்ச்சிக்கு இப்போதே மிகுந்த எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அன்று ரகுமானின் பாடல் களை கேட்க 193 நாடுகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஐ.நா. சபைக்கு வர உள்ளனர்.

ஐ.நா. சபையில் இதற்கு முன்பு 1966-ம் ஆண்டு பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி இசை நிகழ்ச்சி நடத்தினார். அதன்பிறகு 50 ஆண்டு களுக்கு பிறகு இப்போதுதான் இந்தியர் ஒருவரின் இசை நிகழ்ச்சி ஐ.நா. சபையில் நடைபெற உள்ளது. இந்த இரு சிறப்புகளையும் பெற்றவர்கள் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!