சொகுசு கார் விவகாரம்’,அமலா பால் ஆவேச அறிக்கை!
கேரள மாநிலம் கொச்சியின் புறநகரான திரிபுனித்துராவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மோட்டார் வாகன துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அங்கு இருந்த சொகுசு கார்களின் சிலவற்றில் நம்பர் பிளேட் நீக்கப்பட்டு இருந்ததையும் கண்டுபிடித்தனர். இதில் சில கார்களின் விலை, 3 கோடி ரூபாயை தாண்டி இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த கார்களின் உரிமையாளர் கள் வெளியூர்களுக்கு சென்று இருப்பதால் அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களிடம் அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.நடிகர் பஹத் பாசில் கொச்சியில் வசிக்கிறார். ஆனால், அவர் புதுச்சேரியில் காரை பதிவு செய்துள்ளார். எனவே, அவர் உட்பட 10 பேருக்கு மோட்டார் வாகன துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். 10 நாட்களுக்குள் அவர்கள் பதில் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே இது தொடர்பாக அவர் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இந்திய அரசு, ஒரு நாடு ஒரே வரி என்று ஒன்றுபட்ட வரிவிதிப்பை அமல்படுத்திய பிறகும் கூட, பொது மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையிலும், ஒற்றுமையை குலைக்கும் நோக்குடனும் பிரிவினை வாதங்களை சிலர் ஏற்படுத்துகிறார்கள்,” என ஜிஎஸ்டிக்கு ஆதரவாகவும் அவருடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது “தேசிய கொள்கைகளை முன் நிறுத்தி, மலபார் பகுதியின் சுதந்திர போராட்ட வீரர்களால் உருவமை க்கப்பட்ட ஒரு பாரம்பரியமிக்க தின பத்திரிகை, பொது மக்களின் பார்வையை தன் பக்கம் ஈர்க்கவும், தன்னுடைய பத்திரிகை விற்பனையை அதிகரித்துக் கொள்ளவும், இத்தகைய மேம்போக்கான வழிகளை கையாண்டிருப்பது என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
சட்டத்தை மதிக்கும் இந்திய பிரஜையான நான், நடப்பு ஆண்டில் ரூ. 1 கோடிக்கும் மேலாக வரி செலுத்திய பின்னும், அதுவும் தற்பொழுது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எந்த ஒரு முறைகேடும் கண்டறியப்படாத நிலையில், என் மீதும் எனது குடும்பத்தின் மீதும் குறி வைத்து பரப்பப்படும் தேவையற்ற வதந்திகளாலும் ஏற்படும் துன்புறுத்தல்களுக்கும் எதிராக, நான் பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
ஒரு இந்திய பிரஜையாக நான், இந்தியா முழுவதிலும் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை பார்க்கவும், சொத்துகள் வாங்கவும் உரிமை இருக்கிறது. தாய்நாடு என்பதற்குரிய உண்மையான அர்த்தத்தை தொலைத்துவிட்டு சிலர் பிராந்தியவாத பிரிவினைகளை முன்னிறுத்தி வருவதால், இங்குள்ள வாசகர்கள் தன் மாநிலம் தனிமைப்படுத்தபட்டது போன்ற ஒரு மாயையான சிந்தனைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சம அளவில் தமிழ் சினிமாவிலும் மலையாள சினிமாவிலும் பணியாற்றியுள்ள நான், இவ்விரு மாநிலங்களிலும் என் வருமானத்தையும், சொத்துக்களையும் நியாயப்படுத்த இத்தகைய ஞானிகளிடமே உதவி கேட்கலாம் என்றுள்ளேன். ஒரு வேளை நான் தெலுங்கு சினிமாவில் நடிப்பதற்கும், அல்லது பெங்களூருவில் ஒரு சொத்து வாங்குவதற்கும் இவர்களது ஒப்புதல் தேவைப்படுமோ ?. கடந்த முறை நான் பெங்களூரில் பார்த்த போது, அங்கும் இந்திய ரூபாய் தான் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.
இத்தகைய ஞானிகளுக்கு எழுபது ஆண்டுளில், நமது நாடு கடந்து வந்த பாதை மறந்து போய்விட்டது போலும். இறுதியாக, வேற்றுமையில் ஒற்றுமையை காண்கின்ற இந்த நேரத்தில், அதுவும் தற்போதைய இந்திய அரசு, ஒரு நாடு ஒரே வரி என்று ஒன்றுபட்ட வரிவிதிப்பை அமல்படுத்திய பிறகும் கூட, பொது மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையிலும், ஒற்றுமையை குலைக்கும் நோக்குடனும் முன் வைக்கும் பிரிவினைவாத வாதங்களை உடனடியாக நிறுத்தும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
வருங்காலத்தில் நாம் அனைவரும் மலையாளி, தமிழர், பஞ்சாபி, குஜராத்தி என்கின்ற பாகுபாடுகளை களைந்து, ஒரு இந்தியராக அதன் இறையாண்மைக்கும் வளர்ச்சிக்கும் பலம் சேர்க்கிற வகையில் வலம் வருவோம் என உண்மையாக, உறுதியாக நம்புகிறேன்.
குறுகிய நோக்கில் சின்னச் சின்ன ஆதாயங்களுக்காக, சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கிற இந்தியர்களுக்கு தொல்லை கொடுப்பதை தவிர்த்து, நாம் நம்மை எதிர்நோக்கியுள்ள வறுமை, ஊழல், கல்வியறிவின்மை, அநீதி, போன்ற சமூக ஏற்றத் தாழ்வுகளை களைய போராடுவோம். அதுவே சிறந்த போராட்டமாகும்,” என அமலா பால் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.