உ. பி ; மகன் அகிலேஷூக்கே சைக்கிள் சின்னம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

உ. பி ; மகன் அகிலேஷூக்கே  சைக்கிள் சின்னம்  – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான ஆட்சி நடைப்பெற்றுவருகிறது. அதன் கட்சி தலைவராக முலாயம் சிங் இருந்தார். மேலும் அந்த மாநில முதல்வராக முலாயமின் மகன் அகிலேஷ் இருக்கிறார். இதனிடையே உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் வரும் பிப்ரவரி 11ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தொகுதிகளை பங்கீடு செய்தவதில் தந்தை முலாயமிற்கும் , மகன் அகிலேஷ்க்கும் இடையே பிளவு ஏற்பட்டது.

yadhav jan 16

வேட்பாளர் தேர்வில் அகிலேஷ் யாதவின் விருப்பம் நிறைவேற்றப்படாததால், அவர் கடந்த 1–ந் தேதி, கட்சியின் தேசிய செயற்குழுவை கூட்டி, தன்னை கட்சியின் தேசிய தலைவராக அறிவித்துக்கொண்டார். ஆனால், அந்த கூட்டம் செல்லாது என்று முலாயம்சிங் கூறினார்.இருதரப்பினரும், கட்சியும், கட்சியின் தேர்தல் சின்னமான சைக்கிள் சின்னமும் தங்களுக்கே சொந்தம் என்று தேர்தல் கமி‌ஷனை அணுகி முறையிட்டுள்ளனர். எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்து உள்ளிட்ட ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளனர்.

அந்த ஆதாரங்களை பரிசீலித்த தேர்தல் கமி‌ஷன், இருதரப்பினரிடம் நேற்று முன்தினம் தனது விசாரணையை முடித்தது. தீர்ப்பை ஒத்தி வைத்தது. இந்நிலையில், தேர்தல் கமி‌ஷன் இன்று தனது தீர்ப்பை வழங்கியது. அப்போது முலாயம் சிங்கிற்கு ஏமாற்றமே ஏற்பட்டது.சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ் என்பதை அங்கீகாரம் செய்த தேர்தல் ஆணையம் அவருக்கே சைக்கிள் சின்னத்தை வழங்கியது. சைக்கிள் சின்னத்தை கோரிய முலாயம் சிங்கின் கோரிக்கையானது நிராகரிக்கப்பட்டது. சின்னத்துடன் சமாஜ்வாடி கட்சியும் அகிலேஷ் யாதவிற்கே சொந்தமானது.

Related Posts

error: Content is protected !!