நாம் எல்லோரும் பகையாளிகளில்லை – பங்காளிகள்!- டிடிவி அணிக்கு அதிமுக அழைப்பு!

நாம் எல்லோரும் பகையாளிகளில்லை – பங்காளிகள்!- டிடிவி அணிக்கு அதிமுக அழைப்பு!

அதிமுகவிலிருந்து பிரிந்துச்சென்ற டிடிவி அணியில் உள்ளோருக்கு எடப்பாடி மற்றும் ஓ பி எஸ் ஆகியோர் இணைந்து அழைப்பு விடுத்துள்ளார்கள்.

டிடிவி அணி என்று சொல்லப்படும் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என ஐகோர்ட் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படும் என அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் கட்சியில் மீண்டும் இணைய வேண்டும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அ.தி.மு.க. ஆயிரம் காலத்து பயிர்.  தமிழர்களுக்கு நிம்மதி எனும் நிழல் தரும் ஆலமரம்.  நாம் ஒன்றுபட்டு உழைத்தால் அ.தி.மு.க. எனும் பேரியக்கம் புதிய புறநானூறு படைக்கும் ஆற்றல் பெற்ற இயக்கம் ஆக உருவெடுக்கும்.
 உயர் நீதிமன்ற தீர்ப்பு தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தினைத் தந்துள்ளது.  அ.தி.மு.க. வின ருக்கும், தமிழக மக்களுக்கும் புத்துணர்வினைத் தந்துள்ளது.
ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்கும் இயக்கம் ஆக விஸ்வரூபம் எடுத்து அரசியல் எதிரி களை அழிக்கும்.  அதனால், கட்சியில் இருந்து சில தவறான வழிநடத்துதலால் பிரிந்து சென்ற வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் மக்கள் இயக்கத்தில் மீண்டும் வந்து இணைய வேண்டும்.
சிறு சிறு மனக்கசப்புகளால் மாற்று பாதையில் பயணிக்க சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும்.  எண்ண வேறுபாடுகளை புறந்தள்ளி விட்டு ஒன்றுபட்டு உழைக்கும் இயக்கத்திற்கு திரும்ப வேண்டும். நீர் அடித்து நீர் விலகாது என்பது முதுபெரும் தமிழ் பழமொழி அல்லவா?  உயர் நீதிமன்ற தீர்ப்பின் யதார்த்தத்தினை புரிந்து மாற்று பாதையில் சென்றோர் கட்சிக்கு திரும்புங்கள். ”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

error: Content is protected !!