அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்!

அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்!

ர்வதேச அளவில் ஜாம்வான் நாடுகள் என்று வர்ணிக்கப்பட்ட அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஐ.டி நிறுவனங்கள் கடும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. இதன் தாக்கம் ஐ.டி நிறுவனங்கள் மட்டுமல்லாது முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களாகக் கருதப்படும் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களையும் பாதித்துள்ளது. அதன் வெளிப்பாடுதான் ட்விட்டர், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட்,கூகுள் போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் முடிவுக்கு தள்ளியுள்ளது. ஃபேஸ்புக் தங்களது ஊழியர்களில் 11,000 பேரை நீக்குவதாக அறிவித்தது. ட்விட்டர் தங்களது ஊழியர்களின் 50%க்கும் அதிகமானவர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

 

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ட்விட்டர், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட்,கூகுள் போன்ற நிறுவனங்களில் ஏராளமான இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் வேலை செய்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் H1B விசாவிலே அங்கு வேலைசெய்து வருகின்றனர். H1B விசாவின் படி ஒரு வெளிநாட்டுக்காரர் வேலையை இழந்தால் 60 நாட்கள் மட்டுமே நாட்டில் இருக்க முடியும்.

60 நாளுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.. அமெரிக்காவுக்கு சென்ற இந்தியர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
அதற்குள் அந்த நபர் வேறு வேலையில் சேரவேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இதுவே தற்போது இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிய பணியிடங்களை நிரப்பாத நிலையில், வேலை இல்லாத வெளிநாட்டவர்கள் 60 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் பலரின் குழந்தைகள் அமெரிக்காவிலே படித்துவரும் நிலையில், இது மிக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்காவின் பிரபல நாளிதழான வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் கருத்து தெரிவித்துள்ளது.

error: Content is protected !!