உக்ரைனில் இனி ஏற்படும் ஒவ்வொரு உயிரிழப்புக்கும் நேட்டோ-வே காரணம்!

உக்ரைனில் இனி ஏற்படும் ஒவ்வொரு உயிரிழப்புக்கும் நேட்டோ-வே காரணம்!

க்ரைனில்  இன்று முதல் உயிரிழக்கும் ஒவ்வொரு நபரின் மரணத்திற்கும் நேட்டோ நாடுகளின் பலவீனமும், ஒற்றுமையின்மையும் தான் காரணமாக இருக்கும் என உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவை மிகக் காட்டமாகப் பேசியுள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் 9ஆம் நாளான நேற்றிரவு அதிபர் செலன்ஸ்கி காணொலி வாயிலாக உரையாற்றினார். அந்த உரையில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் மீது சற்று கசப்புணர்வை வெளிப்படுத்தியதோடு மிகவும் உருக்கமாகப் பேசினார். உக்ரைனில் உயிரிழக்கும் ஒவ்வொரு நபரின் மரணத்திற்கும் உங்கள் (நேட்டோ) பலவீனமும், ஒற்றுமையின்மையும் தான் காரணமாக இருக்கும். உக்ரைனின் நகரங்களிலும் கிராமங்களிலும் ரஷ்ய குண்டு மழையைப் பொழிய நீங்கள் பச்சைக் கொடி காட்டியுள்ளீர்கள். ஆம், நீங்கள் நோ ஃப்ளை ஜோன் உருவாக்க மறுப்பதால் அவர்களுக்கு மறைமுகமாக பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது.

நேட்டோ குழுமம் எங்களுக்குச் செய்த ஒரே உதவி 50 டன் டீசலை உக்ரைனுக்கு அனுப்பியது மட்டுமே. இதைவைத்து புடாபெஸ்ட் நினைவுச் சின்னத்தை எரிக்கலாம் என நினைத்தார்கள் போலும். பொதுவான ஐரோப்பாவுக்காக நாங்கள் ரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறோம். லிட்டர் கணக்கிலான ரத்தத்திற்கு மாற்றாக டீசல், பெட்ரோலைக் கொடுத்து சரிக்கட்ட முடியாது என்று செலன்ஸ்கி முதன்முறையாக தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

நேட்டோ என்பது, வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உள்பட 12 நாடுகள் சேர்ந்து 1949இல் இந்த ராணுவ கூட்டு அமைப்பை உருவாக்கின. இப்போது 26 நாடுகள் அதில் உள்ளன. இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாடு மீதும் ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர இணங்க வேண்டும். இதனாலேயே இதில் இணைவதை உக்ரைன் மிகப்பெரிய இலக்காகக் கொண்டிருக்க, இணையவே கூடாது அது பிராந்திய பாதுகாப்புக்கு எதிரானது என்று ரஷ்யா கூறிவருகிறது என்பதுதான் இந்த போருக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!