சென்னை மெட்ரோ ரயில்கள் காலை 5.30 முதல் இரவு 10 மணி வரை இயங்கும்!

சென்னை மெட்ரோ ரயில்கள்  காலை 5.30 முதல் இரவு 10 மணி வரை இயங்கும்!

சிங்காரச் சென்னையில் மெட்ரோ ரயில்கள் வரும் திங்கட்கிழமை (ஜூலை 12- ஆம் தேதி) முதல் காலை 05.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை இயக்கப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று (10/07/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும், வசதிக்காகவும் வருகிற ஜூலை 12- ஆம் தேதி முதல் வார நாட்களில் (திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை) மெட்ரோ ரயில் சேவைகள் காலை 05.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை இயக்கப்படவுள்ளன. மெட்ரோ ரயில் சேவைகள் நெரிசல்மிகு நேரங்களில் (Peak Hours) காலை 08.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் (Non- Peak Hours) 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மெட்ரோ ரயில் சேவைகள் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசுப்பொது விடுமுறை நாட்களில் காலை 07.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் நுழைவதற்கு அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பயணிகள் முகக்கவசம் அணியாவிட்டாலோ அல்லது முகக்கவசத்தை சரியாக அணியவில்லை என்றாலோ உடனடி அபராதமாக ரூபாய் 200 வசூலிக்கப்படுகிறது. 21/06/2021 முதல் 09/07/2021 வரை முகக்கவசத்தை அணியாமல் அல்லது சரியாக அணியாமல் பயணம் செய்வதற்காக 40 பயணிகளிடமிருந்து அபராதமாக ரூபாய் 8,000 வசூலிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காகவும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவதற்கும் மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கு அனைத்து பயணிகளும் கட்டாயம் சரியாக முகக்கவசம் அணிந்திருப்பதுடன் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து பயணம் செய்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” இவ்வாறு மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அ

error: Content is protected !!