ஜூன் 3வது வாரத்தில் +1 வகுப்புகளை தொடங்கலாம்- கல்வித்துறை அறிவிப்பு!

ஜூன் 3வது வாரத்தில் +1 வகுப்புகளை தொடங்கலாம்- கல்வித்துறை அறிவிப்பு!

மிழகத்தில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 3வது வாரத்தில் இருந்து வகுப்புகளை துவக்கலாம் என்றும், பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும் தொலைக்காட்சிகள் மூலம் பாடங்களை ஆரம்பிக்கலாம் என்றும் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அறிவுறுத்தியுள்ளார்,

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் இதோ:

சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கில் தனியார் மற்றும் சுயநிதிப்பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கை தொடர்பாக தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது, தற்போது அரசு மற்றும் உதவி பெரும் பள்ளிகளில் மேல்நிலைப் பிரிவுகளில் ஏற்கனவே சேர்க்கை அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு உட்பட்டு மாணவர்கள் சேர விருப்பம் தெரிவிக்கும் நிலையில் அவர்களின் விருப்பத்திற்கேற்றப்படி பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்

அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மேல் மாணவர்கள் சேர்க்கை கோரும் நிலையில் கோவிட் 19 பெரும்தொற்று காரணமாக ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவீதம் மாணவர்களை கூடுதலாக சேர்க்கலாம்

மிக அதிக விண்ணப்பங்கள் எந்த பிரிவுகளுக்கு வரப்பெறுகிறதோ, அச்சூழ்நிலையில் அதற்கென விண்ணப்பித்த மாணவர்களுக்கு அப்பிரிவோடு தொடர்புடைய கீழ்நிலை வகுப்பு பாடங்களில் இருந்து 50 வினாக்கள் (கொள்குறிவகை) அந்தந்த பள்ளி ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கி அவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்

பிளஸ் 1 வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு ஜூன் 3 வாரத்தில் இருந்து அப்போது கோவிட் குறித்து பெருந்தொற்று குறித்த அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் வகுப்புகளை துவக்கலாம்.

2021 -22 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வித்தொலைக்காட்சி உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் தொலைத்தொடர்பு முறைகளில் பாடங்களை நடத்த ஆரம்பிக்கலாம்,

இவ்வாறு அந்த வழிகாட்டுநெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது,

error: Content is protected !!