வானளாவிய அன்பு கொண்ட சபாநாயகர் அப்பாவு – சில குறிப்புகள்

வானளாவிய அன்பு கொண்ட சபாநாயகர் அப்பாவு – சில குறிப்புகள்

போன 2016-ம் ஆண்டு தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் நெசமாவே ஜெயித்த நிலையிலும் அது தொடர்பான சர்ச்சைகளும், சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு இன்னும் தீராத நிலையில் தற்போது நாலாவது தடவை ஒரே தொகுதியில் வெற்றி பெற்ற அப்பாவு இப்போது தி.மு.க அமைத்துள்ள 16-வது தமிழக அரசின் சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்னிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டும் விட்டார்.

69 வயசான அப்பாவு காங்கிரஸ் கட்சியில்தான் தன் பொலிட்டிக்கல் லைஃப்பை தொடங்கினார். அப்பாலே ஜி.கே. மூப்பனார், தமிழ்மாநில காங்கிரஸை தொடங்கினப்போ பலரைப் போல் அதுலே ஐக்கியமாகி. சட்டசபைதேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆக தேர்வானார். அவரது முதல் தேர்தல் வெற்றி இதுதான். அப்போலே இருந்தே கமிசனுக்கு ஆசைப்படாம தன் பங்காக வரும் பணத்தையும் போட்டு பல நலத் திட்டங்கள் செஞ்சு பலரையும் கவர்ந்தார்

அதை அடுத்து 2001ல் நடந்த தேர்தலில் அப்பாவு அதே தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனா, தமாகா – அதிமுக கூட்டணியில் இருந்த வேறு கட்சிக்கு அந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டதால், ஆவேசமான அப்பாவு, சுயேச்சையா போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிச்சும்புட்டார். அந்த அளவுக்கு ராதாபுரத்தில் செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாக அவர் தன்னை வளர்த்துக் கொண்டிருந்தார். விவசாயிகள் பிரச்னை, தாமிரபரணி ஆற்றில் தனியார் நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதற்கு எதிராகக் குரல் கொடுத்தது என பல்வேறு மக்கள் பிரச்னைகளில் உண்மையான குரல் கொடுத்து வந்ததால் கிடைச்ச சக்சஸிது.

இதுபோன்ற சூழலில், தமாகா மீண்டும் காங்கிரஸில் இணைந்தபோதிலும், அப்பாவு அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். ஆனா பாருங்க, தன்னோட தொகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட அதிமுக முக்கியப் பிரமுகர்கள் சிலரை அப்பாவு தீவிரமாக எதிர்த்ததால், அந்தக் கட்சியின் தலைமையுடன் அவருக்கு பிரச்னை ஏற்பட்டது.இதன் தொடர்ச்சியாக வழக்குகள் பாய்ந்ததால், அப்செட் ஆன அப்பாவு, 2006ஆம் ஆண்டு, திமுக தலைவர் மு.கருணாநிதியை சந்தித்து அக்கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டு அதே வருசம் நடந்த அசெம்பளித் தேர்தலில் திமுக சார்பில் களம் கண்டு வெற்றியும் பெற்றார். வழக்கம் போல் தன் எல் எல் ஏ பணிய செவ்வனே செஞ்சு வந்தார்

இதை அடுத்து 2016ஆம் வருசம் அப்பாவு மீண்டும் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டார். பரபரப்பான வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் அப்பாவு 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் இன்பதுரையிடம் தோற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக சொல்லி சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்தார். அதில், ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்துங்கோ-ன்னு உத்தரவிட்டது. அதன்படி ரீ கவுண்டிங்-கும் நடதுச்சு.. உடனே இதனை எதிர்த்து ஆளுங்கட்ட்சி எம்மெக்லே இன்பதுரை சுப்ரீம் கோர்ட் போட்ட வழக்கால், இன்னிவரை முடிவுகள் வெளியிடப்படாமலேயே இருக்குது.

இந்நிலையில்தான் நடந்து முடிந்த தேர்தலில் அதே ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரை வச்சு கோர்ட் மூஞ்சிலே. புளிச் பண்ண வச்சிட்டார் முதல்வர் ஸ்டாலின்

Related Posts

error: Content is protected !!