புதிய கல்வி கொள்கைக்கு மோடி அமைச்சரவை ஒப்புதல்!

புதிய கல்வி கொள்கைக்கு மோடி அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பொது ஊரடங்கு நாளை ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடியின் தலைமையில் அவரது இல்லத்தில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முக்கியமாக புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ் கோயல், மனித மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சுற்றுச்சூழல் துறை பிரகாஷ் ஜவடேகர், சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கல்விக்கொள்கை குறித்து மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே செய்தியாளர் களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

கல்வித்துறையில் முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 34 ஆண்டுகளாக கல்விக்கொள்கையில் மாற்றம் எந்த மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. மத்திய மனித வள அமைச்சகம் கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

2030-க்குள் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை அடையவே புதிய கல்விக்கொள்கை. உயர்கல்வி அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும். முதல் ஆண்டில் பழைய மற்றும் புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும்.

2-ம் ஆண்டில் புதிய கல்விக்கொள்கை முழுமையாக அமலில் இருக்கும். பொறியியல் போன்ற உயர்கல்வி படிப்புகளில் மாணவர்கள், ஓரிரு வருடங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு மீண்டும் படிப்பை தொடரலாம். 15 ஆண்டுகளில் இணைப்புக்கல்லூரி என்ற முறை நிறுத்தப்படும். எம்.பில் படிப்புகள் நிறுத்தபடுவதாக புதிய கல்விக் கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே கல்வித்தரம் கொண்டு வரப்படும். கல்வி அறிவு குறைவாக உள்ள பகுதிகளில் சிறப்பு கல்வி மண்டலங்கள் உருவாக்கப்படும்.

தேசிய ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படும். இணைய வழி பாடங்கள் மாநில மொழிகளில் வெளியிடப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மென்பொருள் வெளியிடப்படும்.

பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும். கல்வி கட்டணங்கள் தன்னிச்சையாக அதிகரிக்கப்படாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Posts

error: Content is protected !!