தென்காசி போகட்டும் ..சங்கரன்கோவில் திருநொலியோட இருக்கட்டும்- வைகோ!

தென்காசி போகட்டும் ..சங்கரன்கோவில் திருநொலியோட இருக்கட்டும்- வைகோ!

புகழ்பெற்ற எழுத்தாளர் – தேவநேயப் பாவாணர், புகழ்பெற்ற அரசியல்வாதி – வைகோ (மதிமுக கட்சியைத் தொடங்கியவர், புகழ்பெற்ற அரசியல்வாதி – சொ. கருப்பசாமி (அதிமுக அரசின் அமைச்சர் – அக்.22 2011 வரை) தற்சமயம் இறந்துவிட்டார், புகழ்பெற்ற அரசியல்வாதி – ச. தங்க வேலு – திமுக, புகழ்பெற்ற அரசியல்வாதி – ச. முத்துசெல்வி – அதிமுக மற்றும் புகழ்பெற்ற நடிகர் – விவேக் மற்றும் – எஸ். ஜே. சூர்யா சூர்யா பிறந்த ஊரான சங்கரன்கோவில் தொகுதி திருநெல்வேலி மாவட்டத்துடனேயே நீடிக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில், “திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தைப் பிரித்து தென்காசியைத் தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அமைக்கப்படும் என்று 18.7.2019 அன்று சட்டசபையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளதை வரவேற்கின்றேன். புதிய தென்காசி மாவட்டம் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வீரகேரளம்புதூர், ஆலங்குளம், வருவாய் வட்டப் பகுதிகளின் வளர்ச்சிக்கு, தென்காசி மாவட்டம் பயனுள்ளதாக அமைகின்றது.

அதேவேளையில், சங்கரன்கோவில் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவில், திருவேங்கடம் வருவாய்ப் பகுதிகளில் இருந்து தென்காசிக்கு நேரடியான போக்குவரத்துத் தொடர்புகள் இல்லை. இவ்விடங்கள், தென்காசியில் இருந்து வெகுதொலைவில் இருக்கின்றன. திருநெல்வேலிதான் அருகில் இருக்கின்றது. கல்வி, மருத்துவத் தேவைகளுக்காக இப்பகுதி மக்கள் அன்றாடம் திருநெல்வேலிக்குச் சென்று வருகின்றார்கள். சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்குப் போக்குவரத்துத் தொடர்புகள் எளிதாக இருக்கின்றன.

ஆனால், இரவு 9 மணிக்கு மேல் தென்காசியில் இருந்து சங்கரன்கோவிலுக்கு பேருந்துகள் கூடக் கிடையாது. அப்படியானால் திருவேங்கடம், இளையரசனேந்தல், குருவிகுளம், தேவர்குளம் பகுதி மக்கள் எப்படிப் பயணிக்க முடியும்? எனவே, சங்கரன்கோவில், திருவேங்கடம் வருவாய் வட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு மக்கள், திருநெல்வேலி மாவட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்க விரும்புகின்றார்கள். எனவே, இந்தப் பகுதிகள் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்திலேயே நீடிக்கின்ற வகையில் மாவட்டப் பிரிவினை அமைந்திட வேண்டும்” என்று வைகோ தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!