March 27, 2023

ஆதார் அடிப்படையில் வாங்கிய 50 கோடி மொபைல் போன் எண்கள் துண்டிக்கப்படாதுன்னா படாது!

இந்திய பிரஜையின் அந்தரங்க விவரங்கள் அடங்கிய ஆதார் தகவல்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது என்று அண்மையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதால், ஆதாரை அடையாளமாக காட்டி பெறப்பட்ட 50 கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆனாலும் மாற்று அடையாளத்தை வாடிக்கையாளர்கள் சமர்ப்பிக்க போதிய அவகாசம் அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வரையிலும் மொபைல் இணைப்புகள் பெறும்போது, கேஒய்சி எனப்படும் வாடிக்கை யாளர் தொடர்பான விவரங்கள் பெறப்படுகின்றன. ஆதார் எண்ணைக் குறிப்பிட்டால், அதன் மூலம் தனிப்பட்ட விவரங்களை எடுத்துக்கொள்ளும் நடைமுறையில் சுமார் 50 கோடி மொபைல் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதிலும் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மொபைல் சந்தையில் நுழைந்த ரிலையன்ஸ் ஜியோ, சுமார் 25 கோடி இணைப்புகளை மேற்கூறியபடி வழங்கியுள்ளது. பாரதி ஏர்டெல், வோடபோன் – ஐடியா, பிஎஸ்என்எல் போன்றவையும் இவ்வாறு இணைப்புகள் வழங்கியுள்ளன.

இந்த ஆதார் இணைப்பின் மூலம் ஆவணங்கள் டிஜிட்டல் மயமாகி விடுவதால், காகித ஆவணங் களை அழித்துவிடலாம் என கடந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு அனுமதி வழங்கியது. எனவே, மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைத்த வாடிக்கையாளர்கள், அதற்கு முன்னர் விவரங்களை தாளில் நிரப்பி வழங்கிய, கேஒய்சி ஆவணங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங் களால் அழிக்கப்பட்டிருக்கக்கூடும். இந்நிலையில்தான் தனி நபர்களது ஆதார் அடிப்படையில் உள்ள தனித்துவ அடையாளத்தை சான்று ஆவணங்களுக்காக தனியார் நிறுவனங்கள் பயன் படுத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. எனவே, ஆதார் எண் மூலம் கேஒய்சி விவரங்கள் பெறப்பட்ட 50 கோடி மொபைல் இணைப்புகளுக்கு, மீண்டும் புதிதாக வாடிக்கையாளர் விவரங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெறும் நிலை தற்போது உருவாகியுள்ளது.

மொபைல் போன் நிறுவனங்களுடன் நேற்று ஆலோசனை நடத்திய நிலையில், விரைவில் இது தொடர்பாக தொலைத் தொடர்புதுறை உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக தொலைத்தொடர்பு துறை மற்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) கூட்டாக இணைந்து இது தொடர்பாக  வெளியிட்ட அறிக்கையில் 50 கோடி மொபைல் எண்கள் துண்டிப்பு ஆபத்தில் இருப்பதாக ஊடக அறிக்கையை மறுத்துள்ளன.ஆதார் சரிபார்ப்பு அடிப்படையில் சிம் கார்டுகள் வாங்கப்பட்டால், புதிய அடையாளம் கேட்கபடமாட்டாது என கூறி உள்ளது. ஆதார் eKYC மூலம் வழங்கப்பட்ட மொபைல் எண் துண்டிக்கப்பட வேண்டும் என்று அதன் ஆதார் தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட் எங்கும் சுட்டி காட்டவில்லை என்று கூட்டு அறிக்கை தெளிவுபடுத்துகிறது.