புனித எண்ணெயால் விபரீதம் : தான்சானியா சர்ச்சில் 20 பேர் பலி!

புனித எண்ணெயால் விபரீதம் : தான்சானியா சர்ச்சில் 20 பேர் பலி!

தான்சானியா நாட்டின் மோஷி நகரில் உள்ள சர்ச்சில் நேற்று பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிரார்த்தனையின்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து மீட்புக் குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தான்சானியா நாட்டின் வடபகுதியில் உள்ளது மோசி என்ற நகரம். இங்குள்ள தேவாலயத்தில் நேற்று முன்தினம் மாலை பிரபல மதபோதகர் போனிபேஸ் மவம்போசா என்பர் தலைமையில் பிரார்த்தனை நடந்தது. இவர் தன்னை இறைதூதர் என  கூறிவந்தார்.

இதில் கலந்து கொள்ள ஏராளமான மக்கள் வந்திருந்தனர். பிரார்த்தனைக்குப்பின் இவர் தன்னிடம் உள்ள புனித எண்ணெய்யை தொட்டால், அனைத்து விதமான நோய்களும் குணமாகும் என கூறியுள்ளார். அந்த எண்ணெய் அவர்  தரையில் ஊற்றினார். அதைத் தொட மக்கள் முண்டி அடித்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கில 20 பேர் பலியாயினர் பலர் காயம் அடைந்தனர். ‘‘கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் மிதிபட்டதும், ஒருவரையொருவர் முழங்கையால்  தாக்கி கொண்டதும் கொடூரமாக இருந்தது’’ என பீட்டர் கிலேவோ என்பவர் கூறினார்.

Related Posts

error: Content is protected !!