2020–21ம் நிதியாண்டில் ரூ.1.53 லட்சம் கோடி வாராக்கடன்கள் தள்ளுபடி!

2020–21ம் நிதியாண்டில் ரூ.1.53 லட்சம் கோடி  வாராக்கடன்கள் தள்ளுபடி!

ம் நாட்டிலுள்ள பல்வேறு வங்கிகள் ஒவ்வொரு நிதியாண்டிலும் வசூல் செய்ய முடியாத கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்து வருகின்றன.கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.1.53 லட்சம் கோடி மதிப்பிலான வாராக்கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன. இது கடந்த 10 ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன்களில் 2வது அதிகபட்சத் தொகையாகும். கடந்த 2018–19ம் நிதியாண்டில் ரூ.2.54 லட்சம் கோடி மதிப்பிலான வாராக்கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்திருந்தன. கடந்த நிதியாண்டில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களில் பெரும்பாலானவை பெருநிறுவனங்கள் பெற்ற கடன்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. முக்கியமாக, கடந்த நிதியாண்டில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களில் 55.65 சதவீதமானது கடைசி காலாண்டில் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இப்படி வாராக்கடன்களைத் தள்ளுபடி செய்ததில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) முன்னிலையில் உள்ளது. யெஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

பஞ்சாப்–சிந்து வங்கியின் வாராக்கடன் தள்ளுபடி கடந்த நிதியாண்டில் குறைந்துள்ளது. கடந்த 2019–20ம் நிதியாண்டில் ரூ.1,781 கோடி மதிப்பிலான வாராக்கடன்களை அந்த வங்கி தள்ளுபடி செய்திருந்தது. இது கடந்த நிதியாண்டில் ரூ.70.51 கோடியாகக் குறைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் மதிப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி வங்கிகளின் வாராக்கடன் ரூ.6 லட்சம் கோடியாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.6.8 லட்சம் கோடியாக இருந்தது.

கடந்த நிதியாண்டில் வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன்கள்

எஸ்பிஐ – ரூ.34,403 கோடி

யெஸ் வங்கி – ரூ.17,208 கோடி

பஞ்சாப் நேஷனல் வங்கி – ரூ.15,877 கோடி

பரோடா வங்கி – ரூ.14,878 கோடி

ஆக்சிஸ் வங்கி – ரூ.13,906 கோடி

ஐசிஐசிஐ வங்கி – ரூ.9,608 கோடி

யூகோ வங்கி – ரூ.9,411 கோடி

சென்ட்ரல் பேங்க் – ரூ.5,992 கோடி

நிதியாண்டுகள் வாரியாக தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன்கள்

2017–18 – ரூ.1.44 லட்சம் கோடி

2018–19 – ரூ.2.54 லட்சம் கோடி

2019–20 – ரூ.1.45 லட்சம் கோடி

2020–21 – ரூ.1.53 லட்சம் கோடி

error: Content is protected !!