வாக்குப்பதிவு யந்திரங்கள் :கணினி மூலம் குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி தொடக்கம்!

வாக்குப்பதிவு யந்திரங்கள் :கணினி மூலம் குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி தொடக்கம்!

சென்னை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்ப திவு எந்திரங்கள் முதற்கட்டமாக கணினி மூலம் குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கமிஷனர் கோ.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு அன்று பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வி.வி.பி.ஏ.டி. (VVPAT) கருவிகள் ஆகியவற்றை கணினி மூலம் முதல்நிலை தெரிவு செய்தல் நேற்று (8–ந் தேதி) ரிப்பன் மாளிகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் நடைபெற்றது.

சென்னை மாவட்டத்தில் உள்ள 5,911 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 2,157 துணை வாக்குச்சாவடிகள் அடங்கும். வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தவுள்ள 7,098 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 7,098 கட்டுப்பாட்டு கருவிகள், 7454 VVPAT எந்திரங்களில் முதற்கட்டமாக எந்தெந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு எந்தெந்த இயந்திரங்கள் என கணினி மூலம் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வின்போது, மேற்படி தெரிவு செய்த வாக்குப்பதிவு இயந்திரங்களின் விவரங்கள் மின்னஞ்சல் வழியாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆர்.சீதாலட்சுமி, கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் துணை ஆணையாளர் ஜெ.மேகநாத ரெட்டி, வருவாய் அலுவலர் (தேர்தல்) பெர்மி வித்யா, அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!