ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் நிறைவு!

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் நிறைவு!

ந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவு நிகழ்ச்சி ஸ்ரீநகரில் உள்ள பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் வைத்து திங்கள்கிழமை நடந்தது. கடும் பனிப்பொழிவுக்கு இடையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கட்சியின் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் முன்னிலையில் ராகுல் காந்தி தேசிய கொடியை ஏற்றினார். கொடியேற்றி முடித்தப் பின்னர், உற்சாகமாக தனது சகோதரி பிரியங்காவுடன் பனிபந்து வீசி ஏறியும் விளையாட்டில் ராகுல் காந்தி ஈடுபட்டார். அப்போது தனது முத்திரையான வெள்ளைநிற டி சர்ட் அணிந்திருந்த ராகுல் காந்தி அதன் மீது ஒரு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்திருந்தார்.

முன்னதாக யாத்திரையின் நிறைவைக் குறிக்கும் வகையில், பாந்தசவுக்கில் உள்ள முகாம் அலுவலகத்தில், தேசிய கீதம் இசைக்கப்பட தேசியகொடியை அவர் ஏற்றிவைத்தார். பின்னர் தன்னுடன் யாத்திரையில் பங்கேற்றவர்ளிடையே உரையாற்றிய ராகுல் காந்தி,” கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய யாத்திரையில் 136 நாட்களாக நீங்கள் அளித்துவந்த ஆதரவு, அன்பு, பிரியத்திற்கு நன்றி” என்றார்.

நிறைவு நிகழ்ச்சியைத் தொடர்ந்த ஷெக் இ காஷ்மீர் மைதானத்தில் ராகுல் காந்தியின் தலைமையில் நடைபெற்ற பேரணியில் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் பங்கேற்பதற்காக, ஆம் ஆத்மி கட்சி, பாரதிய ராஷ்ட்ரீய சமிதி உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்காத முக்கியமான 21 எதிர்க்கட்சியினருக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. பேரணியில் திமுக, தேசிய மாநாடு கட்சி, பிடிபி, சிபிஐ, ஆர்எஸ்பி, ஐயுஎம்எல் கட்சித்தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஜம்முவில் என்னைப்போல் பா.ஜ தலைவர்கள் யாரும் யாத்திரை மேற்கொள்ள மாட்டார்கள். அவர்கள் உயிருக்கு பயந்து அதை செய்ய மாட்டார்கள். என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் மேற்கொண்ட இந்திய ஒற்றுமை யாத்திரை, ஜம்மு காஷ்மீரில் நேற்று நிறைவு நாளில் குறிப்பிட்டார்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்ளும் விதமாக, தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை (‘பாரத் ஜோடோ யாத்திரை’) கடந்த 2022 செப்.7-ம் தேதி தொடங்கினார். தமிழகத்தில் தொடங்கிய இந்த பாதயாத்திரை, கேரளா, கர்நாடகா, ஹரியாணா, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் என பல்வேறு மாநிலங்களை கடந்து ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வந்தது.

மொத்தமாக 137 நாட்களில் 3,800 கி.மீ.க்கும் அதிகமான தூரத்தை கடந்த இந்த பாத யாத்திரை, ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்று நிறைவடைந்தது. யாத்திரை முடிவில், அங்குள்ள ஷெர்-இ-காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி பேசியது:

“நாடு முழுவதும் 137 நாட்களாக நடைபெற்ற யாத்திரையில் பல்வேறு மாநில மக்களை சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடன் பேசி, குறைகளைக் கேட்டேன். நான் எனக்காகவோ, காங்கிரஸ் கட்சிக்காகவோ, கட்சி வளர்ச்சிக்காகவோ இந்த யாத்திரையை மேற்கொள்ளவில்லை. நாட்டு மக்கள் வாழ்வில் வளம் பெறவேண்டும் என்ற நோக்கிலேயே யாத்திரை மேற்கொண்டேன்.

இந்த நாட்டின் அடித்தளத்தை அழிக்க நினைக்கும் சித்தாந்தத்துக்கு எதிராக நிற்பதே எங்கள்நோக்கம். இந்தியாவின் தாராளவாத, மதச்சார்பற்ற நெறிகளை பாதுகாப்பதே பாரத் ஜோடோ யாத்திரையின் நோக்கம். எனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, தொலைபேசிமூலம் என்னிடம் அந்த தகவலை தெரிவித்தனர். ஒருவருக்கு அதுபோன்ற செல்போன் அழைப்பு வரும்போது ஏற்படும் வலியை காஷ்மீர் மக்கள் நன்கு புரிந்துகொள்வார்கள்.

நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அந்த வலி தெரியும். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரரின் குடும்பத்தினருக்கு அது புரியும். வன்முறையை தூண்டுபவர்களுக்கு அந்த வலி ஒருபோதும் புரியாது. வெறுப்பு உணர்வை தூண்டும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக, ஆர்எஸ்எஸ் போன்றோருக்கு அந்த வலி ஒருபோதும் புரியாது.

அது ராணுவ வீரரோ, சிஆர்பிஎஃப் வீரரோ, எந்த ஒரு காஷ்மீரியோ, யாராக இருந்தாலும் ஒருவரது அன்புக்கு உகந்தவரின் உயிரிழப்பை தொலைபேசி அழைப்பு மூலம் தெரிவிக்கும் வலிமிகுந்த நிகழ்வு இனி நடக்கக் கூடாது என்பதே இந்த யாத்திரையின் நோக்கம். ஜம்மு-காஷ்மீரில் என்னைப் போல பாஜக தலைவர்கள் யாரும் நடந்துவர முடியாது என்பதை உறுதியாக கூறுகிறேன். அவர்கள் ஒருபோதும் அப்படி செய்யமாட்டார்கள். இவ்வாறு நடந்து செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்பதல்ல. அவர்கள் பயப்படுகின்றனர் என்பதே உண்மை நான் தாக்கப்படலாம் என்ற தகவல் அடிப்படையில் பயணத்தை நிறுத்த அறிவுறுத்தப்பட்டேன்.

நான் அதைப் பற்றி யோசித்தேன். பின்னர் நான் எனது பூமியில், என் மக்களுடன்(ஜம்மு) கைகோர்த்து நடப்பேன் என்று முடிவு செய்தேன். என் சட்டையின் நிறத்தை மாற்ற அவர்களுக்கு (அவரது எதிரிகளுக்கு) ஏன் வாய்ப்பு கொடுக்கக்கூடாது. அவர்கள் வேண்டுமானால் அதை சிவப்பு நிறமாக்கட்டும் என்று முடிவு செய்தேன். ஆனால் காஷ்மீர் மக்கள் எனக்கு கையெறி குண்டுகளை வழங்கவில்லை. அவர்களின் அன்பு நிறைந்த இதயத்தை வழங்கியுள்ளனர்.” என்று அவர் பேசினார்.

காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா மற்றும் மூத்த தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த யாத்திரையின்போது, 400 இடங்களில் மக்களுடன் ராகுல் கலந்துரையாடி, 12 பொதுக்கூட்டங்களில் பேசியது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!