முழு நீள சஸ்பென்ஸ் த்ரில்லரான ‘நேர் எதிர்’! மினி ஆல்பம்

முழு நீள சஸ்பென்ஸ் த்ரில்லரான ‘நேர் எதிர்’! மினி ஆல்பம்

கலைப்புலி எஸ். தாணு வின் வி கிரியேஷன்ஸ் வழங்கும் தி மூவி ஹவுஸ் எண்டர் டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஐந்து முக்கிய கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘நேர் எதிர்’ரிச்சர்ட், வித்யா, ஐஸ்வர்யா, எம். எஸ். பாஸ்கர், இவர்களுட ன் பார்த்தி அறிமுகமாகியுள்ள படத்தை கேயாரிடம் 12 ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் கற்ற எம். ஜெயபிரதீப் இயக்கியுள்ளார்.ஒரு முழு நீள சஸ்பென்ஸ் த்ரில்லர். முழுக்க முழுக்க இதன் கதை இரவிலேயே நடக்கிறது. ஒரு காட்சி கூட பகலில் எடுக்கப் படவில்லை என்பது அடிசினல் நியூஸ்.

அது என்ன ‘நேர் எதிர்’? வழக்கமான நாயகன் வில்லன் மோதலா என்றால், மறுத்த இயக்குநர்.”உலகில் எல்லா விலங்குகளும் அதனதன் சுபாவத்தில் சரியாகவே இருக்கின்றன. சிங்கம் புல் தின்னாது; வேட்டையாடவே செய்யும். நாய் முனகாது; குரைக்கவே செய்யும். பூனை குரைக்காது; மியாவ் என்றே கத்தும். பாம்பு கொஞ்சாது; சீறவே செய்யும். ஆனால் மனிதன் மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருக்கிறான்.

ஒரு மனிதன் எப்போது புலி போல பதுங்குவான்,எப்போது சிங்கம் போல வேட்டையாடுவான் என்று யாருக்கும் தெரியாது. எப்போது நரித்தனம் செய்வான், எப்போது பாம்பு போல விஷத்தைக் கக்குவான் என்று யாருக்குமே தெரியாது. எல்லா விலங்குகளின் குணத்தையும் தன்னுள்ளே கொண்டவனாக இருக்கிறான்.

ஒருவனைப் பற்றி உலகில் மற்றவர் நினைத்து நம்பி இருக்கும் எண்ணத்துக்கு ‘நேர் எதிர்’ ஆக அவன் இருக்கிறான். இந்த சுபாவ முரண்பாடுகளை எடுத்துக்கொண்டு சுவாரஸ்யப்படுத்தி உருவாகியுள்ள படம்தான் ‘நேர் எதிர்’.படத்தில் வரும் 5 பாத்திரங்கள் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று புரியாதபடி காலம் நடத்தும் ஆட்டம்தான் திரைக்கதை.”என்கிறார்.

error: Content is protected !!