முத்தூட் நிறுவனத்தில் கொள்ளையடித்த கும்பல் கைது! – வீடியோ!

முத்தூட் நிறுவனத்தில் கொள்ளையடித்த கும்பல் கைது! – வீடியோ!

ஓசூரில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான 25 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 18 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கூடவே நகைகள் மீட்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் சாலையில் உள்ள தனியார் நகை கடன் நிதி நிறுவனமான முத்தூட் பைனான்ஸில்  நேற்று காலை மர்ம நபர்கள் 6 பேர் துப்பாக்கி முனையில் 25 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஐஜி பெரியய்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கங்காதர் ஆகியோர் நேரில் விசாரணை செய்து குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டனர்.

இதை அடுத்து கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில், அதிகாலை 4 மணி அளவில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 கைத்துப்பாக்கிகள் 25 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் 6 கொள்ளையர்களும் ஹைதராபாத் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, பின்னர் தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முத்தூட் நிறுவனத்தில் கொள்ளையடித்தவர்களை 18 மணிநேரத்தில் விரைந்து பிடித்த போலீசுக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். ஓசூரில் கொள்ளையடிக்கப்பட்ட 25 கிலோ தங்கத்தை துரிதமாக செயல்பட்டு போலீசார் மீட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாரின் செயல்பாடு தமிழ்நாடு காவல்துறையினரின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்

error: Content is protected !!