முதல் படத்திலேயே ரஜினி, விஜய், அஜீத் ரேஞ்சுக்கு பாடல்! – பேரரசு வேதனை
ஜெகோவா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தேவன் நடிக்கும் “காதல் பஞ்சாயத்து”படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேரரசு புதுமுக நடிகர் இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார்.”முதல் படத்தில் நடிக்கும் ஹீரோக்கள் தங்களது படங்களில் ரஜினி அளவிற்கு பில்டப் பாடலை அறிமுக பாடலாக வைத்து நடிக்கிறார்கள்.முதல் படத்திலேயே ரஜினி, விஜய், அஜீத் ரேஞ்சுக்கு பாடல்களை வைக்காதீர்கள் அது படம் பார்க்க வருபவர்களை எரிச்சல் ஊட்டும் கொஞ்சம் கொஞ்சம் என்று வளருங்கள்.மக்கள் உங்களை ரசிக்க ஆரம்பித்தவுடன் அதுமாதிரி பாடலில் நடியுங்கள் புதுமுகங்களை வைத்து இயக்கும் இயக்குனர்களிடம் இதை வேண்டு கோளாக வைக்கிறேன்.
நான் திருப்பாச்சி படத்தை இயக்கிய போது விஜய் அக்ஷன் ஹீரோவாக பெரிய ஆளாகி விட்ட நேரம் “நீ எந்த ஊரு நான் எந்த ஊரு” என்ற பாடலை பதிவு செய்து போட்டு காட்டினோம் அதை கேட்ட விஜய் இது சரியா வருமா? இவ்வளவு பில்டப் எடுபடுமா? என்று கேட்டார்.அவரை சமாதானப் படுத்தி நடிக்க வைத்தேன் அவ்வளவு பெரிய நடிகரே பயந்த நேரம் உண்டு என்றார்.
ஜாக்குவார் தங்கம் பேசியபோது….ஒரு தமிழன் நடித்த தெனாலிராமன் படத்தை வெளியிட விடமாட்டோம் என்று சிலர் அறிக்கை விடுகிறார்கள்,ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் அவர்களிடம் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன் .நீங்கள் தடுத்து பாருங்கள் நாங்கள் திரண்டு வந்து தற்கொலை படையாக மாறிக் கூட படத்தை திரையிட வைப்போம் மீறி தடுத்து பாருங்கள் என்று பேசினார்.
விழாவில் கலைபுலி .எஸ்.தாணு , பி.எல்.தேனப்பன், பட்டியல் சேகர்,இயக்குனர் சுராஜ், இயக்குனர் கலைசங்கர், நடிகர் தேவன் ஆகியோர் பேசினர்.