மாமனார் ஆன சரத்குமாருக்கு முதல்வர் வாழ்த்து! + மினி ஆல்பம்

மாமனார் ஆன சரத்குமாருக்கு  முதல்வர் வாழ்த்து! + மினி ஆல்பம்

நடிகர் சங்க சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார்-ராதிகா சரத்குமார் தம்பதியின் மகள் ரேயான், மற்றும் அபிமன்யு ;கவிதா தம்பதியரின் மகன் அபிமன்யு முகுந்த் ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர்கள்,நடிகைகள் மற்றும் தொழிலதிபர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் சரத்குமார் மகள் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சரத்குமாருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் “23.9.2015 அன்று நடை பெறவுள்ள தங்களது மகள் திருவளர்செல்வி ரேயான் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கு வருகை தருமாறு அழைத்தமைக்கு என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


தங்களது மகளின் திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டு, நேரில் வாழ்த்த விரும்பியபோதிலும், எனது அலுவல் பணிகள் காரணமாக நேரில் வர இயலவில்லை. இல்லற வாழ்வில் இணைய உள்ள திருவளர் செல்வி ரேயான்- திருவளர் செல்வன் மிதுன் இருவருக்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்”என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

error: Content is protected !!