மத்திய உளவுத்துறையில் பெர்சனல் அசிஸ்டென்ட் ஜாப் வேணுமா?
மத்திய உள்துறை அமைச்சத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறையில் காலியாக உள்ள 69 பெர்சனல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பெர்சனல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 69
தகுதி: பிளஸ் 2 தே்ர்ச்சியுடன் ஸ்டெனோ கிராபியில் நல்ல திறன் பெற்று ஒரு நிமிடத்துக்கு 100 வார்த்தைகள் டிக்கேட் செய்ய வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஈதியம் ரூ.2,400
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதி யானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையங்கள்: அகர்தலா, அகமதாபாத், அமர்தசரஸ், பெங்களூர், போபால், புவனேஸ்வரர், சண்டிகார், சென்னை, டேராடூன், தில்லி, கெளஹாத்தி, ஹைதராபாத், இம்பால், இத்தா நகர், ஜெய்ப்பூர், ஜமீடு, கோகிமா, கொல்கத்தா, லெக், லக்னோ, மீரர், மும்பை, நாக்பூர், பாட்னா, ரெய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, திருவனந்தபுரம், வாரனா சி, விஜயவாடா.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.50, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: http://mha.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.02.2016
மேலும் விவரங்கள் அறிய http://mha.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.