பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெயினி பணி!

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெயினி பணி!

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் எனப்படும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமாகும். தற்போது இந்த நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெயினி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 200 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். டெலிகாம் ஆபரேசன் பிரிவில் 150 பணியிடங்களும், டெலிகாம் பினான்ஸ் பிரிவில் 50 பணியிடங்களும் உள்ளன.
bsnl may 11
9-8-2015 அன்று இதற்கான எழுத்து தேர்வு நடை பெறும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரம் இதோ”

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 30 வயதை கடக்காதவர்களாக இருக்க வேண்டும். 1-8-2015 தேதியை அடிப்படையாக கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

பி.இ./ பி.டெக் படித்தவர்கள், எம்.பி.ஏ. அல்லது அதற்கு இணையான படிப்பு படித்தவர்கள், சி.ஏ., ஐ.சி.டபுள்யூ.ஏ., சி.எஸ். போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு பணி உள்ளது.

தேர்வு செய்யும் முறை:

சான்றிதழ் சரிபார்த்தல், குழு கலந்துரையாடல், எழுத்து தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.1,500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர் ரூ.750 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் exam.bsnl.co.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 14-6-2015-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

விரிவான விவரங்களை www.bsnl.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

error: Content is protected !!