பிசிசிஐயின் தலைவராக சீனிவாசன் போட்டியின்றி மீண்டும் தேர்வு!

பிசிசிஐயின் தலைவராக  சீனிவாசன் போட்டியின்றி மீண்டும் தேர்வு!

கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.இதில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் வேறு எந்த நிர்வாகிகளும் வேட்பு மனுதாக்கல் செய்யாத நிலையில் சீனிவாசன் பி.சி.சி.ஐ தலைவராக போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து என் சீனிவாசனுக்கு அடுத்த ஓராண்டு காலம் பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது.
sep 29 - b c c i srinivasan
இன்று காலை சென்னையில் நடைபெற்ற பிசிசிஐயின் பொதுக்குழு கூட்டத்தில் சீனிவாசன் போட்டியின்றி மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தலைவர் பதவிக்கு சீனிவாசனை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடவில்லை. கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தற்போது 3வது முறையாக சீனிவாசன் தேர்ந்தெடுகப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் தற்போது சீனிவாசனால் பிசிசிஐ தலைவராக உடனடியாக பதவியேற்க முடியாது. ஏனெனில் கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சை விவகாரத்தில் சீனிவாசன் சிக்கியுள்ளதால் உச்சநீதிமன்றம் அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் உடனடியாக பதவி பொறுப்பை ஏற்ககூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது. பீகார் சங்கம் தொடர்ந்துள்ள வழக்கு முடியும் வரை சீனிவாசன் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தேர்தல் முறைப்படியே நடந்துள்ளதாக ராஜூவ் சுக்லா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியே பிசிசிஐ தேர்தல் நடைபெற்றுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தவுடன் சீனிவாசன் தலைவராக பொறுப்பேற்பார் என்றும் கூறினார். இதனிடையே கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மத்திய மண்டல தலைவராக ராஜூவ் சுக்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

N Srinivasan re-elected BCCI president;

*****************************************************
Narayanaswamy Srinivasan will be elected unopposed as president of the Board of Control for Cricket in India (BCCI) for a third year at its Annual General Meeting (AGM) in Chennai on Sunday alongwith all other office bearers.Srinivasan, however, will know Monday whether he can take charge or not only after the Supreme Court decides Monday on the petition filed by the secretary of the Cricket Association of Bihar.

Related Posts

error: Content is protected !!