பணத்தை நிஜமாகவே இரட்டிப்பாக்கும் கிஸான் விகார் பத்ரா மீண்டு(ம்) வந்தாச்!
சேமிப்பில் அதிகமாய் ஜொலிக்கபட்ட “கிஸான் விகாஸ் பத்ரா” என்னும் சிறு சேமிப்பை காங்கிரஸ் 2011 ஆம் ஆண்டு நிறுத்தி வைத்தது அனைவருக்கு தெரிந்ததே. இன்று முதல் அது திரும்பவும் அறிமுகபடுத்தபடுகிறது. கிஸான் விகாஸ் பத்திரம் ரூபாய் 1000, 5000, 10,000, 50,000 டெனாமினேஷனில் கிடைக்கும் ஒரு அற்புத இன்வெஸ்ட்மென்ட். இதில் எத்தனை கோடி வேண்டுமானாலும் இன்வெஸ்ட் செய்யலாம். மினிமம் 1000 ரூபாய். நாமினி வசதி உண்டு. ஜாயின்ட் அக்கவுன்ட் உண்டு. இதை இன்வெஸ்ட் செய்பவரகள் மினிமம் 30 மாசங்கள் கழித்து தான் முழுதாகவோ அல்லது பார்ட் பார்ட்டாகவோ ரெடீம் செய்ய முடியும்.
இந்த பங்கு வைத்திருந்தால் எந்த வங்கியிலும் . தனியார் நிதி நிறுவனத்திலும் லோன் 90% சதவிகிதம் வரை எளிதாக பெற முடியும். முக்கிய அம்சம் இதன் வட்டி 8.7% வருடத்திர்க்கு வட்டி விகிதத்தில் 100 மாதத்தில் (8 வருடம் 4 மாதம்) இரட்டிபாகும் ஒரு பாதுகாப்பான இன்வெஸ்ட்மென்ட். பிபிஎஃப் மட்டும் தான் இது வரை அதிக வட்டி ஈட்டும் சேஃப் இன்வெஸ்ட்மென்ட்டாக இருந்தது. இனிமேல் இதுவும் அதற்க்கு காம்ப்பிட்டீட்டர் ஆகும். நீங்கள் ஏதாவது ஒரு இந்திய போஸ்ட் ஆஃபிஸில் வாங்கலாம் அது மாதிரி எந்த ஒரு இந்திய போஸ்ட் ஆஃபிஸ்க்கு டிரான்ஸ்ஃபர் செய்ய முடியும் இலவசமாய்.
மற்றபடி அரசு அரசு மற்றும் தனியார் வங்கிகளின் வங்கிகளிலும் இதை வாங்க இயலும். அரசு மற்றும் தனியார் வங்கிகள் தரும் சொற்ப வட்டிக்கு இதை கம்பேர் செய்தால் ஒரு நல்ல இன்வெஸ்மென்ட் – இந்த மாதிரி இன்வெஸ்ட்மென்ட் செய்தால் பனகல் பார்க்க்கில் போய் புலம்ப தேவையில்லை.
Double your money or Get loan up to 90% in any financial Institutions – KVP is back with a bang