“நாங்க ரெடி! அப்ப நீங்க?” – தமிழ்நாடு தேர்தல் கமிஷன் ஸ்டேட்மெண்ட்

“நாங்க  ரெடி! அப்ப  நீங்க?” – தமிழ்நாடு தேர்தல் கமிஷன் ஸ்டேட்மெண்ட்

தமிழ்நாடு சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் இறுதிப் பட்டியலை தமிழ்நாடு தேர்தல் கமிஷன் இன்று வெளியிட்டுள்ளது. மாவட்ட வாரியாக வாக்காளர் பட்டியலை அங்குள்ள கலெக்டர்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், மாநிலம் முழுவதும் மொத்தம் 5.79 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும் அவர்களில் 2.88 கோடி ஆண் கள் என்றும் 2.91 கோடி பெண்கள் என்றும் 4 ஆயிரத்து 383 பேர் திருநங்கையர் என்றும் தெரிய வந்துள்ளது.புதிய வாக்காளர்கள் சேர்க்கை சிறப்பு முகாம்களின் மூலம் கடந்த ஒன்றாம் தேதிவரை 12.33 லட்சம் புதிய வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான வாக்காளர் அடை யாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. பணிகள் நிறைவடைந் ததும் பூத் அலுவலர் கள் மூலம் பிப்ரவரி பத்தாம் தேதிவாக்கில் உரியவர் களிடம் அடையாள அட்டைகள் ஒப்படைக்கப்படும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையாளர் ராஜேஷ் லக்கானி குறிப்பிட்டுள்ளார்.

 

tn assembly dec 28மேலும் குறித்து தமிழ்நாடு தேர்தல் கமிஷன் அறிக்கையில், “01.01.2016-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 15.09.2015 அன்று வரைவுப் பட்டியல் வெளியீட்டுடன் தொடங்கியது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க/நீக்க/திருத்த/இடம் மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் 15.09.2015ஆம் தேதியிலிருந்து 24.10.2015-ஆம் தேதிவரை பெறப்பட்டன.

மேற்கண்ட சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் / நீக்கல் / திருத்தல் / இடமாற்றம் செய்தல் ஆகியவற்றிற்காக கீழ்க்கண்டவாறு விண்ணப்பங்கள் பெறப்பட்டு தீர்வு செய்யப்பட்டன.

பெயர் சேர்த்தல்:

பெறப்பட்ட விண்ணப்பங்கள் – 17,10,000

ஏற்கப்பட்டவை – 16,18,526 (94.76%)

இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு ஆகியவற்றின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட நீக்கல்கள் – 3,85,293

திருத்தல்கள்

பெறப்பட்ட விண்ணப்பங்கள் – 2,67,400

ஏற்கப்பட்டவை – 2,56,888

தொகுதிக்குள்ளேயே முகவரி மாற்றம்

பெறப்பட்டவிண்ணப்பங்கள் – 1,29,712

ஏற்கப்பட்டவை – 1,13,095201

2016 சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின் இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ் நாட்டில் தற்போது 5.79 கோடி வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் – 2.88 கோடி, பெண் வாக்காளர்கள் – 2.91 கோடி மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 4383 ) பதிவு செய்யப் பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2016-இல் வாக்காளர் பட்டியலில் கூடுதலாக சேர்க்கப்பட்ட நிகர வாக்காளர்களின் எண்ணிக்கை 12.33 இலட்சம் ஆகும்.

விண்ணப்பிக்கும்போது தங்கள் கைபேசி எண்ணை அளித்த சுமார் எட்டு லட்சம் வாக் காளர்களுக்கு குறுந்தகவல் (SMS) அனுப்பப்படுகின்றது.

புதிய வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டு வருகின்றன. இவை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் 10.02.2016 வாக்கில் வழங்கப்படும்.

இந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் சிறப்பம்சமாக, அனைத்து முதன்முறை வாக்கா ளர்களுக்கும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையுடன் ‘வாக்காளர் வழிகாட்டி’ என்ற தகவல் கையேடும் வழங்கப்படும். வாக்காளராகப் பதிவு செய்தல் மற்றும் வாக்குப் பதிவு நடைமுறைகள் குறித்து எளிதாகப் புரியும் வகையிலான தகவல்கள் இந்தக் கையேட்டில் உள்ளன.

மேலும், இறுதி வாக்காளர் பட்டியல்களின்படி, தமிழ்நாட்டிலேயே அதிக அளவு வாக் காளர்கள் கொண்ட சட்டமன்றத் தொகுதி காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள 27. சோழிங்க நல்லூர் சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதியின் மொத்த வாக்காளர் கள் 5,75,773 பேர் ஆவர். (ஆண்கள் 2,91,909, பெண்கள் 2,83,819, மூன்றாம் பாலினத்தவர் 45). 18 – 19 வயதுடைய இளைய வாக்காளர்களும் (12,797 பேர்) இத்தொகுதியில்தான் அதிகமாக உள்ளனர் (ஆண்கள் 7214 , பெண்கள் 5583). மாறாக, தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட சட்டமன்றத் தொகுதி நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள 164. கீழ்வேளூர் (தனி) சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதியின் மொத்த வாக்காளர் கள் 1,63,189 பேர் ஆவர். (ஆண்கள் 81,038, பெண்கள் 82,151).

பணித்தொகுதி வாக்காளர் அதிகமுள்ள சட்டமன்றத் தொகுதி மதுரை மாவட்டத்திலுள்ள 196. திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியாகும் (2402 பேர்).

வெளிநாடுவாழ் வாக்காளர்கள் 47 பேரின் பெயர்களும் வாக்காளர் பட்டியல்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியல்களை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான http://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம்.

வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டிலுள்ளது. தகுதியுள்ள எவரும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமலிருந்தால், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளத்தின் மூலமாக இணைய வழியில் விண்ணப்பிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Posts

error: Content is protected !!