திருப்பூர் எம்.பி. சத்தியபாமாவை கொல்ல முயற்சி: கணவர் கைது!?

திருப்பூர் எம்.பி. சத்தியபாமாவை கொல்ல முயற்சி: கணவர் கைது!?

திருப்பூர் எம்.பி.சத்யபாமாவை அவரது கணவரே கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பெண் எம்பி சத்தியபாமா, ஈரோடு அருகே உள்ள கோபிசெட்டிபாளையத்தில் வசித்து வருகிறார். சத்தியபாமாவுக்கும் அவரது கணவர் வாசுவுக்கும் கடந்த பல ஆண்டுகளாகவே பிரச்சனை இருந்து வருகிறது. 2016ம் ஆண்டு, சத்தியபாமாவுக்கு, வாசு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.இதற்கான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் பட்சத்தில், கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே பிரச்சனை முற்றியுள்ளது. அதில் ஆத்திரமடைந்த அவரது கணவர் வாசு தனது மனைவியை கத்தியால் கொலை செய்ய முயன்றதாக சத்தியபாமாவின் சகோதரர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, கோபிசெட்டிபாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவிட்டு வாசுவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.மேலும் அதிமுக எம்.பி சத்தியபாமா கோபி நகராட்சி தலைவர் ஆன பின்னர் கணவர் வாசுவை உதாசீனப்படுத்தி யதாகவும் , கணவர் வாசுவுக்கு தெரியாமல் பல இடங்களில் அவர் பெயரில் கடன் பெற்றுள்ளார் எனவும் விசாரணையில் வாசு கூறியுள்ளார்.

இந்த நிலையில் சத்தியபாமா எம்பியை அவரது கணவர் வாசு கத்தியால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து எம்பி சத்தியபாமாவின் சகோதரர் சண்முகபிரபு என்பவர் கோபிசெட்டிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதை அடுத்து சத்தியபாமாவின் கணவர் வாசு கைது செய்யப்படுள்ளார். அவர் மீது 294(b), 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1990ஆம் ஆண்டு சத்தியபாமாவுக்கும், வாசுக்கும் திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் இன்று திடீரென அவரது கணவர் வாசு, சத்தியபாமாவை கொலை செய்ய முயற்சித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

error: Content is protected !!