“தமிழகத்தின் மின் பற்றாக்குறையை நான் நீக்குவேன்! – மீண்டும் ராமர் பிள்ளை

“தமிழகத்தின் மின் பற்றாக்குறையை நான் நீக்குவேன்! – மீண்டும் ராமர் பிள்ளை

“தமிழக அரசு அனுமதி அளித்தால் தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையை 6 மாதத்தில் நீக்குவேன் அத்துடன் என் மீது கருணை கொண்டு அனுமதி வழங்கினால் தினமும் 10 ஆயிரம் லிட்டர் மூலிகை பெட்ரோல் மற்றும் தேவையான மின்சாரம் தயாரிக்க முடியும் என்று உறுதி அளிப்பதாக மூலிகைப் பெட்ரோல் புகழ் ராமர் பிள்ளை மறுபடியும் உறுதி பட கூறியுள்ளார்.
Ramar pillai 21`
மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர் பிள்ளை, 1996-ல் ஹாட் டாப்பிக்கில் இருந்தவர். 1999-ல் ஒரு நிறுவனத்தையும் தொடங்கி, ஒன்பது மாதங்களில் 15 லட்சம் லிட்டர் ‘மூலிகை பெட்ரோலை’ உற்பத்தி செய்து விற்பனை செய்தார். விலை மலிவு என்பதால் பலரும் வாங்கினர். அதன் பிறகு ராமர் பிள்ளை மீது விதவிதமான குற்றச்சாட்டுகள், ரெய்டு, வழக்கு என்று பல்வேறு அலைக்கழிப்புகளையடுத்து காணாமல் போயிருந்த ராமர் பிள்ளை இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது,”என்னால் கண்டுபிடிக்கப் பட்ட மூலிகை பெட்ரோல் புதுமையானது.அதிலும் சுற்றுப்புற சூலை பாதுகாக்கக் கூடிய எரிபொருள் என்று உலக காப்புரிமை மையம், அமெரிக்கா, சிங்கப்பூர், டென்மார்க், மலேசியா போன்ற நாடுகளில் சான்றிதழ் பெற்றுள்ளேன்.

அது மட்டுமின்றி 1996ம் ஆண்டில் சென்னை ஐஐடி மற்றும் டேராடூனில் உள்ள ஐஐபி போன்ற பரிசோதனை சாலையில் நடைபெற்ற சோதனையில் நான் தவறு ஏதும் செய்யவில்லை என்று நான் சேகரித்து வைத்துள்ள சான்றிதழ்கள் கூறுகிறது.

இதையெல்லாம் தாண்டி இப்போது நான் ரூபாய் 20 லட்சம் செலவில் மூலகை பெட்ரோல் தயாரிக்கும் இயந்திரங்கள் நிறுவி உள்ளேன். இதன் மூலம் தினமும் 10 ஆயிரம் லிட்டர் மூலிகை எரிபொருள் உற்பத்தி செய்ய இயலும்.

இதை கவனத்தில் கொண்டு தமிழக அரசு என் மீது கருணையுடன் உரிய அனுமதி வழங்கும் பட்சத்தில் இதனை பயன்படுத்தி சுமார் 6 மாத காலத்திற்குள் மின்சாரம் தயார் செய்து குறைந்த விலையில் (1 யூனிட் ரூபாய் 2க்கு) தமிழக மக்களுக்கு வழங்கி மின்சார பற்றாக்குறையை போக்க முடியும் என உறுதி கூறுகிறேன்” என்கிறார்.

error: Content is protected !!