டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு ’என்னை அறிந்தால்” இசை ரிலீஸ்!

டிசம்பர்  31ஆம் தேதி  நள்ளிரவு ’என்னை அறிந்தால்” இசை ரிலீஸ்!

அல்டிமேட் ஸ்டார் அஜீத் நடிப்பில் தற்போது திரைக்கு வர தயாராகிக் கொண்டிருக்கும்ம் படம் ‘என்னை அறிந்தால்’. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா நடித்திருக்கிறார்கள். மேலும் அருண் விஜய், விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு டான் மெகதூர் ஒளிப்பதிவை செய்திருக்கிறார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தற்போது இறுதிக்கட்ட பணியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். என்று ஒரு தரப்பும், ‘அய்யே. இன்னும் அஞ்சு நாள் ஷுட்டிங் இருக்கு’என்று சிலரும் தகவல் சொல்லி வருகிறார்கள். இந்நிலையில் படம் பொங்கலுக்கு வெளியாகுமா? ஆகாதா? என்ற கேள்வி கேட்டாலும் யூனிட்டார் பதிலே சொல்லாமல் இருந்தார்கள்..

இந்நிலையில் ‘என்னை அறிந்தால்’ படத்தின் பாடல்களை டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவில் வெளியிட உள்ளனர். இதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ சாய் ராம் கிரியேசன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அஜீத்தின் ரசிகர்களுக்கு 2015 ஆம் ஆண்டின் விடியல் மிக சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை பொங்கலுக்கு வெளியிடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!