செல்ஃபி மோடி! உம்மா.. உம்மா!! டெல்லி கலக்கல்!
டெல்லி பேரவைத் தேர்தலில் இளைஞர்களின் வாக்குகளை கவரும் விதமாக, “மோடியுடன் செல்ஃபி’ என்ற புதிய யுக்தியை பாஜக கையாளவுள்ளது.இதுகுறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்,”மோடியுடன் செல்ஃபி என்ற இந்த திட்டத்துக்காக தலைநகர் முழுவதிலும் 2,500 சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இவற்றில், மோடியின் உருவம் போன்ற மாயத்தோற்றம் (விர்ச்சுவல்) ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனுடன் நின்று இளைஞர்கள் செல்ஃபி ஃபோட்டோக்கள் எடுத்துக்கொள்ளலாம். சனிக்கிழமை தொடங்கிய முதல் சாவடியில், கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மோடியின் மாயத்தோற்றத்துடன் நின்று முதல் செல்ஃபி புகைப்படத்தை எடுத்துக் கொண்டார்.பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இளைஞர்களின் வாக்குகளை ஈர்ப்பதற்கு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தர்மேந்திர பிரதான் கூறினார்.
இதனிடையே டெல்லியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிரண் பேடிக்காக ஏன் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “கிரண் பேடி பிரசாரத்துக்காக தில்லியின் சாலைகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.எனவே, அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்வது தற்போது சுலபம்’ என்று அவர் தெரிவித்தார்ர்.