சூர்யாவின் ‘அஞ்சான்’ கதை + ஸ்டில்ஸ்!

சூர்யாவின் ‘அஞ்சான்’ கதை + ஸ்டில்ஸ்!

லிங்குசாமி இயக்கதில், சூர்யா நடிக்கும் படமான ’அஞ்சான்’ முதல் கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் முடிந்துள்ளது.இதில் சூர்யாவுக்கு இரண்டு கெட்அப் இருக்கிறது என்றும் இதற்காக 300 கெட்-அப்புகள் வரை சூர்யாவுக்கு போட்டுப் பார்த்து அதில் இரண்டு கெட்அப்புகளை தேர்வு செய்திருக்கிறார்கள் என்பதுடன் சாப்ட்வேர் என்ஜினீயரான சூர்யா, வேலை நிமித்தமாக மும்பைக்குச் செல்லும்போது அங்கு ஒருவருக்கு நல்லது செய்வதற்காக ஒரு காரியத்தை செய்து விடுகிறார். அவர் செய்த காரியம், மும்பை நிழல் உலக தாதாக்களையே அதிர வைக்கிறது. தான் செய்த காரியத்தின் முக்கியத்தும் தெரியாமலேயே ஊர் திரும்புகிறார். சூர்யாவைத் தேடி அண்டர்கிரவுண்ட் தாதாக்கள் பல்வேறு வடிவங்களில் இவ்ர் ஊருக்கு வருகிறார்கள். அவர்கள் சூர்யாவை கண்டுபிடித்தார்களா, சூர்யா செய்த காரியம் என்ன என்பதுதான் கதை என்றெல்லாம் செய்திகள் கசிந்திருக்கிறது.மேலும் மும்பை ஷூட்டிங்கின்போது சமந்தாவுக்கு சரும நோய் பிரச்னையால் ஷூட்டிங் தடைபட்டாலும் அவ்ருக்காக காத்திருந்து இரண்டாம் ஷெட்டியூலை தொட்ர்கிறார்களாம்.இதில் இயக்குநர் லிங்குசாமியும் ஒரு ரோலில் நடிக்கிறார் என்பது அடிசினல் தகவலாம்.

error: Content is protected !!