சிறுவர்களை நிர்வாணமாக்கி வெளியே நிற்க வைத்த ஆசிரியர்கள் – மும்பை ஷாக்

சிறுவர்களை நிர்வாணமாக்கி வெளியே நிற்க வைத்த ஆசிரியர்கள் – மும்பை ஷாக்

மும்பை மலாடு மேற்கு மால்வாணி கேட் நம்பர் 5–ம் நம்பர் பகுதியில் தனியார் பயிற்சி வகுப்பு உள்ளது. இந்த பயிற்சி வகுப்பின் வெளியே நின்றுகொண்டிருந்த 2 சிறுவர்களில் ஒருவன் நிர்வாணநிலையிலும், மற்றொரு சிறு வன் சட்டை மட்டும் அணிந்த நிலையில் அரை நிர்வாணமாக நின்று கொண்டிருக்கும் வீடியோ காட்சிகள் சில தினங்களாக சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.மேலும் பயிற்சி வகுப்பின் மற்ற மாணவ–மாணவிகள் உள்ளே செல்வதும், பின்னர் வெளியே வரும் காட்சியும் அதில் பதிவாகி இருந்தது. இந்த காட்சியை யாரோ படம் பிடித்து வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
mumbai mar 13
இந்த காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்த தனியார் சமூக சேவை அமைப்பு ஒன்று இந்த வீடியோ காட்சி குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இது பற்றி அறிந்ததும் துணை போலீஸ் கமிஷனர் தனஞ்செய் குல்கர்னி சம்பவம் குறித்து விசாரணை நடத்த மால்வாணி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் மால்வாணி போலீசார் வீடியோ காட்சியில் இடம் பெற்ற சம்பந்தப்பட்ட பயிற்சி வகுப்புக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், வீட்டு பாடத்தை எழுதாததால் 2 சிறுவர்களையும் தண்டிக்கும் வகையில் ஆசிரியர்கள் கணேஷ்நாயர், சரோஜ் ஜெய்ஸ்வாஸ் ஆகியோர் வகுப்பின் வெளியே 2 சிறுவர்களையும் நிர்வாணமாக நிற்கவைத்தது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் ஆசிரியர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சம்பவம் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!